தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர், வ.உ.சிதம்பரனார் மைதானத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் கண்காட்சி மற்றும் தமிழக அரசு ஓராண்டில் ஆற்றிய அரும்பணிகளின் தொகுப்பு ஓவிய வடிவங்களின் கண்காட்சி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் தொல்லியல் துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்த ஓவியக் கண்காட்சி ஆகியவை கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கண்காட்சி அரங்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பார்வைக்காக தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இக்கண்காட்சி அரங்கின் நுழைவாயில் பகுதியை ஒட்டியுள்ள முதல் அரங்கில், தமிழக அரசின் சாதனைகள், முதல்வர் தொடங்கி வைத்த திட்டப்பணிகள் குறித்து 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ஓவியக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 190 ஓவியங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியத்துக்கும் கீழே, அதற்கான விளக்கமும், அந்த ஓவியத்தை வரைந்த மாணவ, மாணவிகளின் பெயரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்துள்ள அரங்கில் வைகை நதிக்கரையில் நகர நாகரிகம் குறித்த கீழடி, ஆற்றங்கரை நாகரிகம் குறித்த பொருநை, சங்க காலத் தொழிற்கூடம் குறித்த கொடுமணல், 4,200 ஆண்டுகள் பழமையான இரும்பக் காலப் பண்பாடு குறித்த மயிலாடும்பாறை ஆகிய தலைப்புகளில், மேற்கண்ட 4 பகுதிகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதாவது, தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சிவகளை, அரியலூர் மாவட்டத்தின் கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டத்தின் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தில் துளுக்கார்பட்டி, தருமபுரி மாவட்டத்தின் பெரும்பாலை ஆகிய 7 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழர்களின் எழுத்தறிவு, வேளாண்மை, நீர் மேலாண்மை, கட்டிடத் தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மாதிரிகள், அவற்றின் புகைப்படங்கள் மற்றும் சிவகளை அகழாய்வில் கிடைத்த பொருட்களை விளக்கும் வகையில் தொல்பொருட்கள், முதுமக்கள் தாழிகள், அகழாய்வுக் குழி மாதிரிகள், அவற்றின் புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கொற்கை அகழாய்வின் போது கிடைத்த சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம், துளையுடன் கூடிய வடிகட்டும் குழாய் ஆகியவற்றின் மாதிரிகள், புகைப்படங்கள் மற்றும் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களின் மாதிரிகள், அவற்றின் புகைப்படங்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களான ஈட்டி முனைகள், அம்பு முனைகள், இரும்பினால் ஆன கத்திகள், கோடாரி, ஈமச்சின்னங்களி்ல வைக்கப்படும் படையல் பொருட்கள், மூன்றுக்கால் குடுவை உள்ளிட்ட பானைகள், கிண்ணங்கள், மக்கள் வாழ்விடப் பகுதியில் கிடைத்த வட்டச் சில்லுகள், பாசி மணிகள், சுடுமண்ணால் ஆன பொருட்கள், அவற்றின் புகைப்படங்கள் மற்றும் கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள், அவற்றின் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. புகைப்படங்கள் மற்றும் தொல் பொருட்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பாக சந்தேகங்களை அங்கிருந்த அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி, என்.கயல்விழி செல்வராஜ், மேயர் கல்பனா ஆனந்தகுமார், நீலகிரி எம்.பி ஆ.ராசா, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
KFC Style பிரைடு சிக்கன்![]() 1 day 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 5 days 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 1 day ago |
-
அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமை ரத்துக்கு எதிர்ப்பு: ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் பேரணி
03 Jul 2022மெல்போர்ன் : அமெரிக்க கருக்கலைப்பு சட்ட உரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் சுமார் 15,000 பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பதாகைகளுடன் பேரணியாக சென்றனர்.
-
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்
03 Jul 2022தூத்துக்குடி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது அலகுகள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மி
-
இன்று சூரியனில் இருந்து தொலை தூர நிலைக்கு பூமி செல்வதால் குளிர் உயரும்
03 Jul 2022புதுடெல்லி : சூரியனில் இருந்து பூமி தனது உச்சப்பட்ச தூரத்தை அடைவதால் குளிர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
-
பெய்து வரும் தொடர் கனமழை: சிட்னியில் வெள்ள நீரில் மூழ்கிய குடியிருப்புகள்
03 Jul 2022சிட்னி : ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சிட்னியில் உள்ள ஆயிரக்கணக்கான பொது
-
தென்கொரியா, ஜப்பானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்: வடகொரியா விமர்சனம்
03 Jul 2022சியோல் : ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது.
-
11-ல் நடக்கும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொது செயலாளர் பதவி உருவாக்கப்படும் : நத்தம் விஸ்வநாதன் பேட்டி
03 Jul 2022சென்னை : வரும் 11-ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க.
-
11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை : வைத்திலிங்கம் திட்டவட்டம்
03 Jul 2022சென்னை : 11-ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
-
நாமக்கல்லில் தி.மு.க. சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
03 Jul 2022நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க.
-
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுரை
03 Jul 2022பாரீஸ் : வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, பிரான்சில் முககவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னேற்பாடு பணிகள்: தலைமை செயலாளர் இறையன்பு உயர் அலுவலர்களுடன் ஆய்வு
03 Jul 2022சென்னை : 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு
-
சென்னை காசிமேட்டில் களைகட்டிய மீன் விற்பனை : அலைமோதிய வாடிக்கையாளர்கள்
03 Jul 2022சென்னை : வார விடுமுறை நாளான நேற்று சென்னை, காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 3 பேர் கைது
03 Jul 2022புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்கள் எல்லையிலிருந்து பணமும் பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது.
-
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனம்
03 Jul 2022புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
-
1974-ல் உருவாக்கிய தன்னுடைய 'ரெஸ்யூமை' பகிர்ந்த பில்கேட்ஸ்
03 Jul 2022வாஷிங்டன் : 1974-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தன்னுடைய ரெஸ்யூமை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.
-
ஒழுங்கீனம், முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக நடவடிக்கை எடுப்பேன் : நாமக்கல் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
03 Jul 2022நாமக்கல் : ஒழுங்கீனம் மற்றும் முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
-
விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்
03 Jul 2022எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்டில் விராட் கோலி, ஜானி பேர்ஸ்டோ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
-
உஸ்பெகிஸ்தானில் ஆக. 2 வரை அவசர நிலை பிறப்பிப்பு : அதிபர் மாளிகை தகவல்
03 Jul 2022தாஷ்கண்ட் : கரகல்பக்ஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைமை ஆகஸ்ட் 2 வரை நீடிக்கும் என்று அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
-
காரைக்காலில் காலரா தொற்று: இன்று முதல் 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
03 Jul 2022புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
-
காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருப்பூர், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
03 Jul 2022சென்னை : காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருப்பூர் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர
-
8 பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
03 Jul 2022சென்னை : கோவை, நெல்லை உள்ளிட்ட 8 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.
-
உலகிற்கே இந்தியா தலைமை தாங்கும்: அடுத்த 40 ஆண்டுகள் இந்தியாவில் பா.ஜ.க.வின் சகாப்தமாக இருக்கும் : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 Jul 2022ஐதராபாத் : அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் இந்தியாவில் பா.ஜ.கவின் சகாப்தமாக இருக்கும் என்றும், உலகிற்கே இந்தியா தலைமை தாங்கும் என்றும் தேசிய நலன் கருதி எடுக்கப்படும் ஒவ்வொர
-
சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் : தமிழக அரசிடம் பரிந்துரை தாக்கல்
03 Jul 2022சென்னை : சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது : 11-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
03 Jul 2022நெல்லை : தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்று நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில்.
-
ஹாங்காங் அருகே புயலில் சிக்கி மூழ்கும் கப்பல் : ஊழியர்களை மீட்க போராடும் கடலோர காவல்படை
03 Jul 2022ஹாங்காங் : தென் சீனக்கடலில் இயக்கப்படும் என்ஜினீயரிங் கப்பல் ஒன்று, ஹாங்காங் அருகே புயலில் சிக்கி கவிழ்ந்துள்ளது.
-
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 10 பேர் பலி
03 Jul 2022பாட்னா : பீகாரில் மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பீகார் முழுவதும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஒரே நாளில் மி