எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல்-அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்-அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தி வெடிகுண்டு எதுவும் இல்லாததை உறுதி செய்தனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பது தெரியவந்தது. இவர் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது, அதனை தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி போலீசார் அந்தோணி ராஜை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |