முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
India-Corona 2022 03 15

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. எனினும் தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாகவே பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 35 ஆக பதிவான நிலையில் நேற்று தொற்று பாதிபு 59 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: - தமிழகத்தில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 36 பேர் நேற்று குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்றைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 12,612 - மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து