முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ஓ.பி.எஸ்.ஸை வரவேற்காத நிர்வாகிகள்..! மண்படபத்தில் 'இ.பி.எஸ். வாழ்க' கோஷத்தால் பரபரப்பு

வியாழக்கிழமை, 23 ஜூன் 2022      தமிழகம்
trafic-jam-2022-06-23

Source: provided

சென்னை ; அ.தி.மு.க பொதுக்குழுவில் கலந்துகொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, அவரை மூத்த நிர்வாகிகள் யாரும் வரவேற்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், இ.பி.எஸ். வாழ்க என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடியார் வாழ்க, இ.பி.எஸ். வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அப்போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், வளர்மதி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வைகைச்செல்வன் பொதுக்குழு உறு்பபினர்களை அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டனர். 

பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யாரும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்கவில்லை. அவருடன் வருகை தந்திருந்த வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து