முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெய்து வரும் தொடர் கனமழை: சிட்னியில் வெள்ள நீரில் மூழ்கிய குடியிருப்புகள்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      உலகம்
Australia 2022 07 03

Source: provided

சிட்னி : ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சிட்னியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர் கனமழையால், சிட்னி நகரம் முழுவதும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் கடுமையான வெள்ளத்தில் மூழ்கிய மேற்கு சிட்னியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சிட்னியின் தென்மேற்கு புறநகர் பகுதியான கேம்டனில், கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 

இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் மாநில அவசரகால் சேவை துறை அமைச்சர் ஸ்டெபனி குக் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது உயிருக்கு ஆபத்தான அவசர நிலை. வரவிருக்கும் நாட்களில் மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் குறுகிய அறிவிப்பில் வீடுகளை விட்டு வெளியேற தயாராக இருக்க வேண்டும்.

மேலும், ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டிய சிட்னியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வசிப்பவர்கள், மோசமான வானிலை காரணமாக தங்கள் பள்ளி விடுமுறை பயணத் திட்டங்களை ரத்து செய்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து