எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
8-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தின் சூ பெய்லியை நேற்று எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பவினா பட்டேல் 11-6, 11-6, 11-6 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். முன்னதாக நடைபெற்ற காலிறுதி போட்டியில் பவினா பட்டேல் 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
____________
மல்யுத்தம் - 4 போட்டியாளர்கள்
அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்தியா அதிக பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மல்யுத்த போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளன. இதில் நேற்று முன்னதாக நடைபெற்ற போட்டியில் தீபக், பஜ்ரங் புனியா ஆகியோர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த நிலையில் இதை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில் தீபக் புனியா, ஷேகு கசெக்பாமாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அதே போல் முன்னணி வீரர் பஜ்ரங் புனியா காலிறுதியில் எளிதாக வெற்றி பெற்றார்.
அதே போல் பெண்களுக்கான 62 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இங்கிலாந்தின் கெல்சி பார்ன்ஸை வீழ்த்தி இந்தியாவின் சாக்சி மாலிக் அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு வீராங்கனை அன்ஷு மாலிக் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஐரீன் சிமியோனிடிஸை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
_____________
பேட்மிண்டன் : ஸ்ரீகாந்த்
காலிறுதி சுற்றுக்கு தகுதி
பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அணி சுற்று நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கின. பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றில் (ரவுண்டு ஆப் 32) இந்தியாவின் முன்னணி வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உகாண்டாவை சேர்ந்த டேனியல் வனாகலியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் இலங்கையை சேர்ந்த துமிந்து அபேவிக்ரமாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-9, 21-12 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
____________
உயரம் தாண்டுதலில் சாதனை
படைத்த தேஜஸ்வின் சங்கர்
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.
தேஜஸ்வின் சங்கர். மகளிருக்கான ஜூடோவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளி வென்றார். 200 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஹிமாதாஸ் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். பாட்மிண்டனில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-4, 21-11 என்ற நேர் செட்டில் மாலத்தீவுகளின் பாத்திமத் நபாஹாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
___________
பாரா பளு தூக்குதலில்
தங்கம் வென்றார் சுதிர்
7-வது நாளில் பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வ-து தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 134.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனை ஆகும். இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
_____________
அரையிறுதியில் இந்திய
ஆடவர் ஹாக்கி அணி
காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. பிர்மிங்கமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்ட முடிவில் 4-1 என வேல்ஸை வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது இந்தியா. ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார்.
மற்றொரு கோலை குர்ஜந்த் சிங் அடித்தார். 4 ஆட்டங்களில் மூன்று வெற்றிகள், ஒரு டிரா என 10 புள்ளிகளைப் பெற்று இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. சனிக்கிழமையன்று நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
_____________
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.