முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 நாகை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Stelin 2022 02 23

Source: provided

சென்னை : இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 9 மீனவர்கள், கடந்த 6-ம் தேதி இரவு விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை திடீர்குப்பம் பகுதியை சேர்ந்த 9 பேரை கைது செய்ததோடு, விசைப்படகு மற்றும் மீன்பிடி வலைகள், உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 

தமிழகத்தை சேர்ந்த ஒன்பது மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 10-8-2022 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து