எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்றார். மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொள்ளிடம் பாலம் அருகே சோதியக்குடி புறவழிச்சாலையில் தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்பு அங்கிருந்து புறப்பட்டு திருவெண்காடு சென்று அங்கு மதியம் தங்கினார். தொடர்ந்து மாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு செம்பதனிருப்பு சென்று அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் பூம்புகார் சாலை முதல் கச்சேரி சாலையில் உள்ள தி.மு.க. அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார். முதல்-அமைச்சரை பார்ப்பதற்காக சாலையின் இருபுறமும் தி.மு.க. கொடிகள், தி.மு.க. கொடி நிறத்திலான பலூன்கள், முதல்வர் படங்கள் கொண்ட பதாகைகளை பிடித்தபடி பொதுமக்கள் மற்றும் கட்சியினர் நின்று இருந்தனர். வழிநெடுகிலும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ மூலம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முதல்-அமைச்சரின் சுற்றுப்பயணத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


