முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அருகே துயர சம்பவம் : கடலில் குளித்து கொண்டிருந்த 4 பேர் அலையில் சிக்கி மாயம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Chennai-Sea 2022-08-14

Source: provided

சென்னை ; திருவொற்றியூரில் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். 

 சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கரீம் மொய்தீன். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே கடலில் குளிக்க சென்றனர்.

  இந்நிலையில் 9 பேரும் கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்த போது திடீரென்று கடலில் தோன்றிய ராட்சத அலை கபீர், அமரின், ஆபான், அவர்களது நண்பர் சபரி ஆகிய 4 பேரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. 

உடனே அருகில் குளித்துக் கொண்டு இருந்த உறவினர்கள் அவர்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டினர். உடனே அருகில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடி வருகின்றனர். மேலும் தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் கடலில் காணாமல் போன நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து