முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அருகே துயர சம்பவம் : கடலில் குளித்து கொண்டிருந்த 4 பேர் அலையில் சிக்கி மாயம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Chennai-Sea 2022-08-14

Source: provided

சென்னை ; திருவொற்றியூரில் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி மாயமான 4 பேரை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். 

 சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கரீம் மொய்தீன். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே கடலில் குளிக்க சென்றனர்.

  இந்நிலையில் 9 பேரும் கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்த போது திடீரென்று கடலில் தோன்றிய ராட்சத அலை கபீர், அமரின், ஆபான், அவர்களது நண்பர் சபரி ஆகிய 4 பேரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. 

உடனே அருகில் குளித்துக் கொண்டு இருந்த உறவினர்கள் அவர்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டினர். உடனே அருகில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் இறங்கி தேடி வருகின்றனர். மேலும் தகவல் அறிந்ததும் திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் கடலில் காணாமல் போன நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து