முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப்போரில் தமிழகம்: சென்னையில் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-6 2022-08-15

Source: provided

சென்னை : சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். 

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.   இதையடுத்து சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலையினை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டார். நாட்டின் சுதந்திரத்திற்கு அவர்கள் செய்த தியாகத்தைப் போற்றும் வகையில் இந்த புகைப்பட கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து