முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம்: நாக் கமிட்டி

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Karunya-University 2022-08-

Source: provided

கோவை : காருண்யா பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது.

கோவை காருண்யா நகரில் உள்ள காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தற்காலிக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவுகளான செயற்கை நுண்ணறிவியல், சைபர் செக்யூரிட், டேட்டா சயின்ஸ், ஆப்டோமேட்ரி, தடய அறிவியல், குற்றவியல், தகவல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல், மீடியா உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் தேசிய மதிப்பீட்டு குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளவை.

இந்தநிலையில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழு காருண்யா பல்கலைக்கழகத்துக்கு வந்து அங்குள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்தது. பின்னர் நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு உயர்தர அங்கீகாரத்தை (ஏ.பிளஸ்.பிளஸ்) வழங்கி உள்ளது.

இந்த அதிகபட்ச அங்கீகாரம் பெற ஒத்துழைப்பு வழங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், இணை துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், பேராசிரியர்கள் குழுவினர், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பணியாளர்களுக்கு பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், டிரஸ்டி சாமுவேல் தினகரன் ஆகியோர் வாழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து