முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு: வரும் 28-ம் தேதி அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
Stalin 2022 01 07

Source: provided

சென்னை : வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து வரும் 28-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் 2-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஆறு, குளம், கால்வாய்கள், தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதையொட்டி ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. 

இந்த பணிகள் எந்த அளவு முடிந்துள்ளது என்பது பற்றி ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி உள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் தீயணைப்பு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து