முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய படையிடம் இருந்து முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      உலகம்
Ukrainian-Army 2022-10-02

Source: provided

கீவ் ;.ரஷ்ய படையிடம் இருந்து முக்கிய நகரை உக்ரைன் மீட்டுள்ளது. இது ரஷ்யாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றின. அதன்பின் சில பகுதிகள் ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் ராணுவம் மீட்டது. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனின் கிழக்கில் உள்ள லைமன் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருந்தன. அந்த நகரை மீட்க உக்ரைன் படையினர் தொடர்ந்து சண்டையிட்டனர். அந்த நகரை உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷ்ய படைகள் பின் வாங்கின. 

டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷ்யா பயன்படுத்தி வந்தது. ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும். அங்குள்ள லைமனை உக்ரைன் படைமீட்டுள்ளது ரஷ்யாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து