முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை: ராஜஸ்தான் மாநிலத்தில் ரொக்கம், தங்கம் பறிமுதல்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      இந்தியா
CPI 2022--10-05

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் சி.பி.ஐ. நடத்திய சோதனையில் ராஜஸ்தானில் இருந்து மட்டும் ரூ.1.5 கோடி ரொக்கம், 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், "ஆபரேஷன் சக்ரா" என சி.பி.ஐ. நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்.பி.ஐ. கொடுத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக நாட்டின் 105 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், 300-க்கும் மேற்பட்ட நபர்களை கண்காணித்து வருவதாகவும், ராஜஸ்தானில் ஒரு இடத்தில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மற்றும் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து