முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரம் : 2 அரசு மருத்துவர்களிடம் வரும் 6-ம் தேதி விசாரணை

புதன்கிழமை, 30 நவம்பர் 2022      தமிழகம்
Priya 2022-11-16

Source: provided

சென்னை : கால்பந்து வீராங்கனை பிரியா மரண விவகாரத்தில் 2 அரசு மருத்துவர்களிடம் வரும் 6-ம் தேதி மருத்துவர்கள், போலீசார் அடங்கிய குழு விசாரணை நடத்தவுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர் மற்றும் பணியாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதற்கு மருத்துவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், 2 மருத்துவர்களிடம் டிசம்பர் 6 ஆம் தேதி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

மருத்துவர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு, விசாரணை அதிகாரி, துணை ஆணையர் கொண்ட விசாரணை குழு மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உள்ளது. மருத்துவர்களின் பாதுகாப்பு கருதி ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து