தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மாண்டஸ் புயலால் சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் ராட்சத அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்பி வருகின்றன. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர்.
புயல் காரணமாக, மாமல்லபுரம், கல்பாக்கம் உள்பட பல்வேறு மீனவ குப்பம் பகுதிகளில் நேற்று 2வது நாளாக பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கரையை நோக்கி பெரும் சீற்றத்துடன் அலைகள் வேகமாக வந்து மோதின. 10 அடி உயரத்துக்கு அலை எழுந்ததால் காலையில் நடைபயிற்சிக்கு சென்ற உள்ளூர் மக்களை போலீசார், தீயணைப்பு படையினர் திருப்பி அனுப்பினர். இதே போல் வெண்புருஷம் குப்பம், கொக்கிலமேடு குப்பம், தேவனேரி, சாலவான்குப்பம், புதுஎடையூர் குப்பம், பட்டிப்புலம் குப்பம், சூளேரிக்காடு குப்பம், புதிய கல்பாக்கம் குப்பம், நெம்மேலி குப்பம், திருவிடந்தை, செம்மஞ்சேரி குப்பம் வரை கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் கரையை ஒட்டியுள்ள மீனவ குப்பங்களில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு செல்லும் சாலையோரம் இருந்த பெரிய காட்டுவா மரம் பலத்த சூறைக்காற்றினால் முறிந்து விழுந்தது. உடனே அவற்றை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
மாண்டஸ் புயல் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த தரைக்காற்று வீசியது. 10 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்ததால் பழவேற்காடு-காட்டுப்பள்ளி தரைமட்ட சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். காட்டுப்பள்ளி, காலாஞ்சி, பழவேற்காடு உள்பட கடலோர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களை நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்தார்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்வது வழக்கம். புயல் காரணமாக காசிமேட்டில் இருந்து மீன் பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை. விசைப்படகுகளை பாதுகாப்பாக மீனவர்கள் கட்டி வைத்துள்ளனர். சிறிய படகுகளை கிரேன் மூலம் கரைக்கு தூக்கி பாதுகாப்பாக வைத்துள்ளனர். புயல் காரணமாக காசிமேட்டில் 10 அடி உயரத்துக்கு கடல் சீற்றம் காணப்பட்டது. அதனால் கடற்கரைக்கு யாரும் செல்லக்கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மெரினா பட்டினப்பாக்கம் பகுதியில் நேற்று காலையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடற்கரை மணல் பகுதியை தாண்டி வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
பட்டினப்பாக்கத்தில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சிலவற்றையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. இந்த படகுகளை மீனவர்கள் போராடி கரைக்கு கொண்டு வந்தனர். பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் கடற்கரை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதே போல திருவொற்றியூரில் காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் ராட்சத அலையுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் சந்திரபாடி மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமம் தமிழக எல்லைக்கும், புதுக்சேரி மாநிலம் காரைக்கால் எல்லைக்கும் நடுவே உள்ள பகுதியாகும். இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக எழுந்த பல அடி உயர அலைகள் நேற்று காலை இந்த மீனவ கிராமத்திற்குள் புகுந்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் தாரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் விரைந்து சென்று அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றி வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து உள்ளனர்.
இதே போல், சீர்காழியை அடுத்த தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மழை நீர் வெளியேறாத நிலையில் நேற்று காலை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடல் நீர் தொடுவாய், மடவாமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் நீர் வெளியேற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தாசில்தார் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களை மீட்டு பாதுகாப்பாக தொடுவாய் அரசு பள்ளி மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடல் கொந்தளிப்பால் நாகை மாவட்டம் நாகூர் அருகே மீனவ கிராமமான பட்டினச்சேரியில் கடல் நீர் உள்ளே வந்தது. இதனால் அங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்த நிலையில், புதுச்சேரியின் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. வீட்டில் மீதமிருந்த பொருட்களை மக்கள் தெருவில் எடுத்து வைத்திருந்தனர். அரசு தரப்பில் தூண்டில் வளைவு அமைக்காததால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி மக்கள் ஈ.சி.ஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் அங்கு நேரில் வருவதாக உறுதி தந்ததால் போராட்டத்தை ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர்,வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 3 days 2 min ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 6 days 5 min ago |
ராகி அடை![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-30-01-2023
30 Jan 2023 -
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பை சரிபார்க்கும் வசதி : தமிழக மின்வாரியம் அறிமுகம் செய்தது
30 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
உணவு, எரிபொருட்கள் இன்றி பொருளாதார சிக்கலில் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகள்
30 Jan 2023இஸ்லாமாபாத் : உணவு, எரிபொருட்கள் இன்றி கடும் பொருளாதார சிக்கலில் இந்தியாவின் அண்டை நாடுகள் தவித்து வருகின்றன.
-
தேசபிதா காந்தியின் 76-வது நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
30 Jan 2023சென்னை : 76-வது நினைவு தினத்தையொட்டி நேற்று மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு கவர்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றம்: அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட போப் வலியுறுத்தல்
30 Jan 2023ரோம் : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் போப் பிரான்சிஸ்
-
ஹாக்கி உலகக் கோப்பை தோல்வி: இந்திய அணியின் பயிற்சியாளர் கிரஹாம் உள்பட 3 பேர் விலகல்
30 Jan 2023சென்னை : நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.
-
விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணையும் மைக்கேல்
30 Jan 2023Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணைந்து நடித்திருக்கும
-
பாகிஸ்தான், பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் 25 பேர் பலி : 100-க்கும் மேற்பட்டோர் காயம்
30 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் , 100க்கும் மேற்பட்டோ் காயமுற்றதாகவும் பாக்., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
-
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: 33 தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டி
30 Jan 2023லாகூர் : இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
முடியை தானமாக வழங்கிய நடிகை வைஷாலி
30 Jan 2023திருமதி தென் இந்தியா என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான போட்டி கேரளாவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன்: டிரம்ப்
30 Jan 2023கொலம்பியா : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
30 Jan 2023சென்னை : 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல ஷபாலி வர்மா விருப்பம்
30 Jan 2023முதலாவது மகளிர் ஜூனியர்(யு19) உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்
-
ஸ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்தார் ராகுல் காந்தி
30 Jan 2023ஸ்ரீநகர் : இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது.
-
6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது பிலிப்ஸ் நிறுவனம்
30 Jan 2023வாஷிங்டன் : பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஆஸி.யில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
30 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர்.
-
முதல் முறையாக ஈரோடு இடைத்தேர்தலில் அறிமுகம்: பாதுகாப்பு அம்சத்துடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை : தலைமை தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு
30 Jan 2023சென்னை : பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-31-01-2023.
31 Jan 2023 -
சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் இன்று துவங்குகிறது : 4 பேரை மட்டும் அழைத்து வர வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
30 Jan 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வேட்பு மனுத்தாகல் ஆரம்பமாகவுள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டும் அழைத்து வர வேண்டும் என்றும், கோஷம் போட
-
திரிபுரா சட்டசபை தேரதல்: திரிணமூல் காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
30 Jan 2023கொல்கத்தா : திரிபுரா பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புக : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
30 Jan 2023சென்னை : தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
தங்களது குழந்தைக்கு இந்தியா என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி
30 Jan 2023இஸ்லாமாபாத் : வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு 'இந்தியா' என பெயரிட்டுள்ளனர்.
-
வீடியோ விவகாரம்: 'எடிட்' செய்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் : பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சவால்
30 Jan 2023கோவை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது:தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பிப். 1-ல் கனமழைக்கு வாய்ப்பு
30 Jan 2023சென்னை : வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, திங்கட்கிழமை காலை (ஜன.30) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
-
பாரதீய ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
30 Jan 2023புதுடெல்லி : பாரதீய ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் பரப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.