முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை தாண்டியதாக கைது: நாகை மீனவர்கள் 31 பேர் விடுதலை

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      இந்தியா
Fissherman 2024-12-02

Source: provided

கொழும்பு: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீன வர்கள் 31 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த அக்., 30ம் தேதி 31 மீனவர்கள், கோடியக்கரை தென் கிழக்கில் 45 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மூன்று விசைப்படகுகளையும் சிறைபிடித்து, படகுகளில் இருந்த 31 மீனவர்களையும் கைது செய்து, இலங்கை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, ஊர்க்காவல் போலீசார் விசாரணைக்கு பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட 31 மீனவர்களையும் மீண்டும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, 31 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது. அத்துடன், மீண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்தால் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 31 மீனவர்களும் விரைவில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து