முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.,கில் முற்றும் பொருளாதார நெருக்கடி: பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.35 அதிகரிப்பு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      உலகம்
Petrol 2023 01 30

Source: provided

லாகூர் : பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 35 ரூபாயாக அதிகரித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் தொலைக்காட்சியில் பேசியதாவது. பெட்ரோல், டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் விலையும் தலா ரூ.18 உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு காலை 11 மணியிலிருந்து அமலுக்கு வரும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

இந்த விலை உயர்வுக்குப் பிறகு பெட்ரோல் லிட்டர் ரூ.249.80-க்கும், ஹை-ஸ்பீட் டீசல் ரூ.262.80-க்கும், மண்ணெண்ணெய் ரூ.189.83-க்கும், லைட் டீசல் ஆயில்லிட்டர் ரூ.187-க்கும் விற்பனை செய்யப்படும். பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு இந்த திடீர் விலை உயர்வு அறிவிப்பு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத் தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து