முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ. பன்னீர் செல்வம் விரக்தியின் உச்சத்தில் பேட்டி அளித்துள்ளார்: ஜெயகுமார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      தமிழகம்
Jayakumar 2023 02 07

Source: provided

சென்னை : நிதானம் இழந்து, விரக்தியின் உச்சத்தில் கட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார் என்று முன்னாள் அமைச்சர்  ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 

நிதானம் இழந்து, விரக்தியின் உச்சத்தில் கட்சிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். பிக்பாக்கெட் என்று ஓ. பன்னீர் செல்வம் பேசுவது அரசியல் நாகரீகமா? கடந்த காலத்தில் என்னிடம் இருந்த நிதித்துறையை பறித்துக் கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்தினர் கட்சிக்குள் வரக் கூடாது என்று சொன்னவரும் ஓ.பன்னீர்செல்வம் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து