எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கடந்த 2011-ல் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை காலிறுதியில் வீழ்த்தி அரையிறுதி, இறுதி என கோப்பையை வென்று அசத்தி இருந்தது. அந்தப் போட்டி மார்ச் 24-ல் (நேற்றைய தினம்) நடைபெற்றது. இந்திய அணியின் வெற்றியில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா என இருவரும் பிரதான பங்கு வகித்தனர்.
ஆட்டத்தில் அழுத்தம் நிறைந்த நேரத்தில் அபாரமாக பேட் செய்து அசத்தினர். இந்த வெற்றி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத ஒரு அனுபவம். ஏனெனில் 1999, 2003, 2007 என தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் அந்த அணி களம் கண்டிருந்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது ஆஸி.
________________
சென்னை சூப்பர் கிங்சுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்
வரும் 31-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் விளையாடுகின்றன. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சென்னையில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் அணியுடன் இணைந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மேட்ச் வின்னர். அதற்கு உதாரணம் 2019 ஒருநாள் மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை சொல்லலாம். அதுமட்டுமல்லாது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் இவர்.
________________
அப்ரிடியால்தான் உயிருடன் இருக்கிறேன்: இம்ரான் நசீர்
பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது. இதில் அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் ஓட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் மர்மங்களே இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ரான் நசீர் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் இம்ரான் நசீர் தான் கிரிக்கெட் திறனில் சிறந்த நிலையில் இருந்த போது தனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கபட்டதாகவும். அதில் இருந்து ஷாகித் அப்ரிடிதான் தன்னை காப்பாற்றினார் என கூறி உள்ளார்.
நாதிர் அலி போட்காஸ்டில் இம்ரான் நசீர் கூறி இருப்பதாவது:-சமீபத்தில் என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மெர்குரி திரவத்தை என்னுடைய உணவில் யாரோ சேர்த்து இருக்கிறார்கள். இது ஒரு மெல்ல கொல்லும் விஷம். அது உங்கள் மூட்டை அடைந்து அவற்றை சேதப்படுத்துகிறது. 8-10 ஆண்டுகளாக, எனது அனைத்து மூட்டுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அண்ணன் அப்ரிடிக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. என கூறி உள்ளார்.
________________
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து வெளியேற்றம்
சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.சி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அவர் 2-வது சுற்றில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமாவர்தானியிடம் 15-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் தோற்றார். ஏற்கனவே இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரனாய், மிதுன், மஞ்சுநாத் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோற்றனர். இதன் மூலம் சுவிஸ் ஓபன்பேட்மின்டனில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. தைவானின் பாங்சிக்லீ-ஜென் லீ ஜோடியை 12-21, 21-17, 28-26 என்ற கணக்கில் கடுமையாக போராடி வென்று கால் இறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது. சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் டென்மார்க்கின் ஜெப்பே பே-லாஸ்சே மோல் ஹெடே ஜோடியுடன் மோதுகிறது.
________________
நியூசிலாந்து - இலங்கை மோதும் முதல் ஒருநாள் இன்று துவக்கம்
இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது.
இதில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இந்திய நேரப்படி நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து அணி டாம் லாதம் தலைமையிலும், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையிலும் களம் காணுகிறது. டெஸ்ட் போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி அந்த ஆதிக்கத்தை ஒருநாள் தொடரிலும் நீட்டிக்க முயற்சிக்கும். அதேநேரத்தில் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த போட்டி பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மட்டர் பன்னீர் மசாலா2 days 12 hours ago |
கோபி மஞ்சூரியன்![]() 5 days 11 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 1 week 2 days ago |
-
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்
05 Jun 2023முத்தையா இயக்கத்தில் ஆர்யா சித்தி இத்னானி, ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தற்போது வெளியாகி இருக்கும் படம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்
-
மாமன்னன் இசை வெளியீட்டு விழா
05 Jun 2023மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 05-06-2023.
05 Jun 2023 -
நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்ற வேண்டும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் உரை
05 Jun 2023ஊட்டி : நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
-
வீரன் விமர்சனம்
05 Jun 2023மரகத நாணயம் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள படம் வீரன். கதை,
-
500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
05 Jun 2023சென்னை : 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
இதுவரை 2.29 லட்சம் பேர் விண்ணப்பம்: பொறியியல் மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண்கள் இன்று ஒதுக்கீடு : வரும் 20-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி
05 Jun 2023சென்னை : தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இதுவரை 2.29 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ள நிலையில், மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
-
சரத்குமார் நடிக்கும் போர் தொழில்
05 Jun 2023விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11-ம் தேதி சேலம் பயணம் : ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
05 Jun 2023சேலம் : சேலம் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்
-
பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது: குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பீகார் முதல்வர் நிதிஷ்
05 Jun 2023பாட்னா : பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் நிதிஷ் குமார், பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகள் மீது உ
-
ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
05 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 12-ம் தேதிக்கு தள்ளிவைப்பு : ஆலோசனைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
05 Jun 2023சென்னை : கடுமையான வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
ரெயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறோமா? - ஒடிசா அரசு விளக்கம்
05 Jun 2023புவனேஸ்வர் : பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எந்த எண்ணமும் ஒடிசா அரசுக்கு இல்லை என்றும், மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முன்
-
பிரமாண்டமாக வெளியான ஸ்பைடர்-மேன்
05 Jun 2023இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் படம் மற்றும் ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம் SPIDER-MAN:ACROSS THE S
-
பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார்: பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்
05 Jun 2023மும்பை : பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
05 Jun 2023சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
துரிதம் விமர்சனம்
05 Jun 2023வெங்கடேசன் இயக்கத்தில் ஜெகன், ஈடன் உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் துரிதம்.
-
ஒடிசா ரயில் விபத்து: தமிழர்கள் 6 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
05 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை.
-
அமித்ஷாவுடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு : பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
05 Jun 2023புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
-
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம்: ரணில் விக்ரமசிங்கே
05 Jun 2023கொழும்பு : இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது.
-
பாதுகாப்பு உபகரணங்களை இணைந்து தயாரிக்க இந்தியா, அமெரிக்கா ஒப்புதல்
05 Jun 2023புதுடெல்லி : பாதுகாப்பு உபகரண கூட்டு உற்பத்திக்கு இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ளன.
-
இந்த வாரம் வெளியாகும் டக்கர்
05 Jun 2023பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள டக்கர் படம் ஜூன் 9 அன்று தமிழ
-
உன்னால் என்னால் விமர்சனம்
05 Jun 2023சோனியா அகர்வால், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, ஆகியோருடன் புதுமுகங்கள் ஜெகா , ஏ.
-
கம்பம் அருகே மக்களை அச்சுறுத்திய அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது : 144 தடை உத்தரவு வாபஸ்
05 Jun 2023உத்தமபாளையம் : தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்திய அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் நேற்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.
-
கார் விபத்தில் மலையாள நடிகர் கொல்லம் சுதி பலி : திரையுலகினர் இரங்கல்
05 Jun 2023கொச்சி : மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி நேற்று அதிகாலை நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.