Idhayam Matrimony

சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை நமக்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      இந்தியா
Modi 2023-05-10

புதுடெல்லி, சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் கொள்கையும் நமக்கு உத்வேகத்தை அளிக்கின்றன எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

மகாராஷ்டிரத்தில் உள்ள ராய்காட் கோட்டையில் மராட்டிய வாரியர் மன்னரின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மாநில அளவிலான விழாவில் விடியோ செய்தியில் பிரதமர் இதைக் குறிப்பிட்டுள்ளார். 

சத்ரபதி சிவாஜியின் ஆட்சியில் அரசு மற்றும் மக்களின் நலன் அடிப்படைக் கொள்கையாக இருந்தது. அவரது முடிசூட்டு விழாவின் ஆண்டு விழா நமக்கு உத்வேகம் மற்றும் ஆற்றல் அளிப்பதாகவும், இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயமாக உள்ளதாகவும் அவர் கூறினார். 

ஒரு தலைவரின் முக்கிய நோக்கம் தன் மக்களை உந்துதலாக வைத்திருப்பதுதான். மக்களிடையே அடிமைத்தனத்தை நீக்கி, அரசையும் படையெடுப்பாளர்களிடமிருந்தும் பாதுகாத்து சுயராஜ்ஜியத்தின் நம்பிக்கையை மக்களிடையே ஊக்குவித்தவர் சத்ரபதி சிவாஜி. அவரது வாழ்க்கை தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து