எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து, கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துக்களில் மூன்றாவது மிகப் பெரிய ரயில் விபத்து ஆகும்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த நிலையில், யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் அங்கு விபத்துக்குள்ளானது.
மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் அதுல் கர்வால் கூறுகையில், "உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது இது மிகவும் மோசமான விபத்தாகும். விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதியிருக்கிறது. ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன" என்றார்.
3-வது மிகப் பெரிய விபத்து:
கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒடிசா விபத்து 3-வது மிகப் பெரிய விபத்து என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இதுவரை நிகழ்ந்துள்ள மிகப் பெரிய ரயில் விபத்துகள் வருமாறு.,
1) அக்டோபர் 18, 2018: பஞ்சாப்பின் அமிர்தசரஸில் தசரா பார்வையாளர்களின் மீது ரயில் மோதிய விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2) நவம்பர் 20, 2016: உத்தரப் பிரதேசத்தின் கான்பூரிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள புக்ராயனில் இந்தூர் - ராஜேந்திரா நகர் விரைவு ரயிலில் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 152 பேர் உயிரிழந்தனர், 250-க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்.
3) மே 28, 2010: ஹவுரா - லோகமானிய திலக் டெர்மினஸ் ஞானேஸ்வரி அதி விரைவு வண்டி, மகாராஷ்டிராவின் ஹமாசுலி மற்றும் சர்திகா இடையே சென்றபோது எதிரே வந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 140 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
4) அக்டோபர் 29, 2005: ஆந்திரப் பிரதேச மாநிலம், வாலிகொண்டா நகரத்தில் திடீர் வெல்லத்தால் சிறிய ரயில்வே பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதால், டெல்டா பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 144 உயிரிழந்தனர், 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
5) செப்டம்பர் 9, 2002: பிஹாரின் கயா மற்றும் டெஹாரி ஆன் சோன் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்றுப்பாலத்தில், ஹவுரா ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்டு இரண்டு பெட்டிகள் ஆற்றினுள் விழுந்ததில் 140 பேர் உயிரிழந்தனர்.
6) ஆகஸ்ட் 2, 1999: மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தின் கைசால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் விரைவு ரயில் மீது பிரம்மபுத்ரா மெயில் வந்து மோதிய விபத்தில் குறைந்தது 285 பேர் உயிரிழந்தனர். சுமார் 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
7) நவம்பர் 26, 1998: பஞ்சாப் மாநிலம் கன்னாவில், ஃப்ரன்டியர் கோல்டன் டெம்பிள் ரயிலின் தடம்புரண்ட மூன்று பெட்டிகளின் மீது ஜம்மு தாவி-சீல்டா விரைவுரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 212 பேர் உயிரிழந்தனர்.
8) ஆகஸ்ட் 5, 1997: ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் பிரம்மாபுர் இடையே இரண்டு கோரமண்டல் விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு ரயில் ஹவுராவில் இருந்தும், மற்றொன்று சென்னையில் இருந்தும் வந்து கொண்டிருந்தன. இரண்டு ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 15, 1999-ல் துசி கிராஸிங் அருகே நாகவல்லி ஆற்றில் கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்தனர்.
9) ஆகஸ்ட் 20, 1995: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் அருகே, நின்று கொண்டிருந்த காளிந்தி விரைவு ரயில் மீது புருஷோத்தம் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 350 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலன பயணிகளில் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
10) ஜூலை 8, 1988: கேரளா மாநிலம், கொல்லம் அருகில் உள்ள அஷ்டமுடி ஏரியில் உள்ள பெருமான் பாலத்தில் சென்ற விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 106 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ரயிலின் 10 பெட்டிகள் நீரில் மூழ்கின.
11) ஜூன் 6, 1981: பீகார் மாநிலத்தில் பாக்மதி ஆற்றுபாலத்தை கடக்கும் போது ரயில் ஒன்று தடம்புரண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 300 பேர் உயிரிழந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.