முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி: கையில் கருப்பு பட்டையை அணிந்து விளையாடிய இந்திய-ஆஸி. வீரர்கள்

புதன்கிழமை, 7 ஜூன் 2023      விளையாட்டு
India-Australia 2023 06 07

Source: provided

லண்டன் : ஒடிசா ரயில் விபத்தில் உயிரழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர்களுடன், ஆஸ்திரேலிய அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

நிதான துவக்கம்...

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இதில் உஸ்மான் காவாஜா ரன் எதுவும் எடுக்காமல் சிராஜ் பந்துவீச்சில் அவுட்டானார்.

அஞ்சலி செலுத்தும்...

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய அணி வீரர்கள், கள நடுவர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து தங்கள் இரங்கல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து