எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டி அவர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. இதுகுறித்து பேசிய ரோஹித் ஷர்மாவிடம் தொகுப்பாளர், ‘அஸ்வினை ஆட்டத்தில் எடுக்காதது கடினமானதாக இருக்குமா?’ என கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த ரோஹித், “அஸ்வின் விளையாடப் போவதில்லை என நான் எங்கும் சொல்லவில்லை. நாளை (இன்று) வரை காத்திருப்போம்.
ஏனென்றால் நான் இங்கிருக்கும் பிட்ச்-ஐ கவனித்தேன். அதன் தன்மை நாளுக்கு நாள் மாறிக்கொண்டேயிருக்கிறது. இன்றைக்கு (நேற்று) இப்படியிருக்கும் இந்த பிட்ச் நாளை (இன்று) கொஞ்சம் மாறலாம். யாருக்கு தெரியும். ஆக, வீரர்களுக்கு ஒன்றை மட்டும் நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். 15 பேரும் எந்த நேரத்திலும் விளையாடத் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
________________
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் அல்காரஸ்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது. 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
________________
இங்கி.,டெஸ்ட் அணியில் மீண்டும் மொயீன் அலி..!
ஆஸ்திரேலிய அணிக்கு நாதன் லைன் என்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர் உள்ளார். அதேபோல் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இருந்து வந்தார். அவர் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருந்து வந்தது. இந்த ஆஷஸ் தொடரில் அவரை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. மேலும் அவரிடம் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். மொயீன் அலி பந்துவீச்சில் தாக்கம் ஏற்படுத்துவதுடன் சிறந்த முறையில் பேட்டிங் செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
________________
தயார் நிலையில் 2 ஆடுகளங்கள்
இரண்டாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கிய நிலையில் எண்ணெய் உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், கிரிக்கெட் போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெறும்போது ஆடுகளம் மற்றும் மைதானத்தை சேதப்படுத்தப்போவதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும், போராட்டக்காரர்கள், ரசிகர்களோடு ரசிகர்களாக வந்து ஆடுகளத்தில் புகுந்து சேதப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக ஐசிசி 2 ஆடுகளங்களை தயார்நிலையில் வைத்துள்ளது. ஒருவேளை ஆடுகளம் சேதமடையும்பட்சத்தில், இருவரும் விளையாட ஒப்புக்கொண்டால், மாற்று ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவார்கள். இல்லையெனில் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது கைவிடப்படலாம். ஆனால் அப்படி ஏதும் இதுவரை நடக்கவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் குலாப் ஜாமுன்![]() 3 days 15 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 17 hours ago |
சில்லி சப்பாத்தி![]() 1 week 2 days ago |
-
இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? - சீதாராம் யெச்சூரி தகவல்
22 Sep 2023பாட்னா : இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2023.
22 Sep 2023 -
லெபனானில் அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு
22 Sep 2023பெய்ரூட் : லெபனானில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்ப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் : பாதுகாப்பு பணியில் 18,500 போலீசார்
22 Sep 2023சென்னை : சென்னையில் இன்றும், நாளையும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளதையொட்டி 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Sep 2023சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
22 Sep 2023புதுச்சேரி : புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து 2 வீரர்கள் விலகல்
22 Sep 2023ஜோகன்னஸ்பர்க் : 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் 10 நகரங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது.
-
அமெரிக்காவில் ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு : கூடுதல் ஆயுதங்கள் வழங்குவது குறித்து பேச்சு
22 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஜோபைடன் மற்றும் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் வரவேற்றனர்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வாரண்டு பிறப்பிப்பு : அக். 4-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேரடி உதவிப்பிரிவு அதிகாரிகளாக பணிபுரியும் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐக
-
உங்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது? - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
22 Sep 2023சென்னை : உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என்று நடிகர் விஷாலை சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டித்தார்.
-
15 நாளில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் : சீமானுக்கு வீரலட்சுமி நோட்டீஸ்
22 Sep 2023சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில், ரூ.2 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்
-
இலக்கு என்பது கிடையாது: மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
22 Sep 2023சென்னை L மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தல்
22 Sep 2023புதுடெல்லி : சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
காலில் விழுந்த வானதி சீனிவாசனை செல்லமாக கடிந்து கொண்ட பிரதமர்
22 Sep 2023புதுடெல்லி : காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வை பிரதமர் மோடி, காலில் விழக் கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார்.
-
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்தது ரஷ்யா
22 Sep 2023மாஸ்கோ : உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
-
மகளிர் உரிமை திட்ட பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம்
22 Sep 2023சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
-
மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
22 Sep 2023புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
மணியம்மையார் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்
22 Sep 2023சென்னை : மணியம்மையார் குறித்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
22 Sep 2023சென்னை : தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்: பிரதமர் மோடிக்கு கவர்னர் தமிழிசை நன்றி
22 Sep 2023புதுச்சேரி : சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதற்காக பிரதமர் மோடிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் : அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
22 Sep 2023சென்னை : சென்னை பெசன்ட் நகர் ஓடை மாநகர் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
துருக்கியில் சிகிச்சை பெற்று வரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டுவர 10 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
22 Sep 2023சென்னை : உடல் நலக்குறைவால் துருக்கியில் சிகிச்சை பெற்று வரும் 2 வயது குழந்தையை சென்னைக்கு கொண்டு வர 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.&
-
உ.பி.யில் பரபரப்பு: ரயில்வே பெண் போலீசை தாக்கியவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
22 Sep 2023லக்னோ : உத்தர பிரதேசத்தில் ரயில்வே பெண் போலீசை தாக்கிய நபர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம்: மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்?
22 Sep 2023சென்னை : அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர்.
-
சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் 2 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு
22 Sep 2023ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது