முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் கணக்கு தணிக்கை அறிக்கை: கவர்னரிடம் வழங்கினார் தலைமை கணக்கு அதிகாரி

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை:  தமிழக அரசின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை ஆளுநரிடம் முதன்மை தலைமைக் கணக்கு அதிகாரி வழங்கினார்.

இது தொடர்பாக முதன்மை தலைமைக் கணக்கு அதிகாரி சி.நெடுஞ்செழியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "2022- மார்ச் 31 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழக அரசின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி நேற்று முன்தினம் (07.06.2023) தமிழக கவர்னரிடம் அளித்தார். 

இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி, தணிக்கை அறிக்கையை கவர்னரிடம் அளிக்க இந்திய அரசியல் சட்டம் பிரிவு 151(2) வகை செய்கிறது." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து