எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற 8-ம் நாள் போட்டியின் போது 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. நடைபெற்ற 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே, 8 நிமிடம் 19.50 விநாடிகளில் முதலாவதாக வந்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார்.
இதற்கு முன்பு 2018-ல் ஈரான் வீரர் ஹொசைன் கெய்ஹனி 8 நிமிடங்கள் 22.79 விநாடிகளில் ஓடியதே ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையாக இருந்தது. அதை தற்போது அவினாஷ் முறியடித்துள்ளார். மேலும், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவினாஷ் பெற்றுள்ளார்.
ஆடவர் குண்டு எறிதல் போட்டியில்:- இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் 20.36 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து தங்கம் வென்றார். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தஜிந், தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் அணி துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான், கியானன் செனாய், ஜொராவர் சிங் சாந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 361 புள்ளிகளைக் குவித்து தங்கம் வென்றது.
துப்பாக்கிச் சுடுதல் மகளிர் அணி டிராப் பிரிவில்:- மணீஷ் கீர், பிரீத்தி ரஜாக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 337 புள்ளிகள் குவித்து 2-ம் இடம் பிடித்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 357 புள்ளிகள் குவித்த சீன அணிக்கு தங்கமும், 336 புள்ளிகள் குவித்த கஜகஸ்தான் வீராங்கனைகளுக்கு வெண்கலமும் கிடைத்தது.
கோல்ஃப்:-
மகளிர் கோல்ஃப் பிரிவில் இந்திய வீராங்கனை ஆதித்தி அசோக் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தை தாய்லாந்து வீராங்கனை அர்ப்பிசயா யூபோலும், தென்கொரிய வீராங்கனை ஹுயுன்ஜோ யூ 3-வது இடமும் பிடித்தனர்.
1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி:- ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் அஜய்குமார் சரோஜ் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஜின்சன் ஜான்சன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜோதி யார்ராஜிக்கு வெள்ளி:-
மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி 3-வதாக (12.91 விநாடி) வந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதே பிரிவில் பங்கேற்ற சீன வீராங்கனை யானி வூ (2-வது இடம்) தகுதியிழப்பு செய்யப்பட்டதால் ஜோதி யார்ராஜி இரண்டாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதக்கம், வெள்ளிப் பதக்கமாக மாற்றப்பட்டது.
முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி:-
ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 2-வது இடம் (8.19 மீட்டர் தூரம்) பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
மகளிர் வட்டு எறிதல் போட்டி:-
இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலமும் (58.62 மீட்டர் தூரம்), மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகாசரா வெண்கலமும் வென்றனர். மகளிர் 50 கிலோ குத்துச்சண்டை அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் 1-2 என்ற கணக்கில் தாய்லாந்தின் ரகாஸ்த் சுத்தாமத்திடம் தோல்வி கண்டார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துடன் திரும்பினார்.
பதக்கப் பட்டியலில் 4-வது இடம்:-
8-ம் நாள் போட்டிகளின் முடிவில் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் ஜப்பானும், 3-வது இடத்தில் கொரியாவும் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவாகிறது மேலும் ஒரு புயல் சின்னம் : 8 மாவட்டங்களில் இன்று கனமழை
17 Nov 2025சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 22-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: வரும் 24-ம் தேதி கொடியேற்றம்
17 Nov 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற 24ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்று 89-வது நினைவு நாள்: வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை
17 Nov 2025சென்னை : வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளை முன்னிட்டு அரவது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
-
ரஷ்யாவிடம் 25,500 கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா
17 Nov 2025புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கியது.
-
காந்தா திரைவிமர்சனம்
17 Nov 20251950களின் காலக்கட்டத்தில் சேலம் மாடன் ஸ்டுடியோவில் பிரபல நடிகர் ஒருவருக்கும், அவரை உருவாக்கிய இயக்குநர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ பிரச்சனையை மையமாக்க் கொண்டு உருவ
-
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Nov 2025சென்னை, ‘மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனா் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்
17 Nov 2025பாட்னா, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜினாமா செய்துள்ளார். கவர்னர் முகமது கானிடம் தனத் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஆண்பாவம் பொல்லாதது படக்குழு
17 Nov 2025டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான படம் ஆண்பாவம் பொல்லாதது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-11-2025.
17 Nov 2025 -
சவுதியில் பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
17 Nov 2025துபாய் : மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் 45 இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு
17 Nov 2025சென்னை : பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம்
17 Nov 2025திஸ்பூர் : அசாமில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கப்படவுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
17 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு செய்யப்படுகிறது.
-
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது : உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
17 Nov 2025சென்னை : வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
-
சிசு படத்தின் 2-ஆம் பாகம் ரோட் டு ரிவெஞ்ச்
17 Nov 2025ஜல்மாரி லாண்டர் இயக்கத்தில் இம்மாதம் 21 ந்தேதியன்று வெளியாக உள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘ரோட் டு ரிவெஞ்ச்’.
-
மெட்ராஸ் மாஃபியா கம்பெனி திரைவிமர்சனம்
17 Nov 2025பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார்.
-
இயற்கை விவசாயிகள் மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி நாளை கோவை வருகை
17 Nov 2025கோவை : கோவை கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வருகிறார்.
-
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ தகவல் மையங்கள்: அமைச்சர்
17 Nov 2025சென்னை, சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையங்கள் செயல்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
42 இந்தியர்கள் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
17 Nov 2025புதுடெல்லி : சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சி: பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளுக்கு உதவ மாவட்ட கலெக்டருக்கு முதல்வர் உத்தரவு
17 Nov 2025கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவையான உதவிகளை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் உத்
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
17 Nov 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2028-ல் சந்திரயான்-4 ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
17 Nov 2025கொல்கத்தா : 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் தெரிவித்தார்.
-
தீர்ப்பு ஒரு தலைபட்சமானது: மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா விமர்சனம்
17 Nov 2025டாக்கா: வங்காள தேச முன்னாள் பிரதமர் மரண தண்டனை குறித்து ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர்
17 Nov 2025சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அ
-
சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு: 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
17 Nov 2025கேரளா, துவார பாலகர் சிலையில் தங்கம் திருட்டு தொடர்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.


