முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் 5 பெண்கள் உட்பட 20 நக்சல்கள் சரண்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      இந்தியா
naxals-2023-04-03

Source: provided

சுக்மா : சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 பெண்கள் உட்பட 20 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் வசித்துவந்த சிலர், நக்சல் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்தனர். மேலும் சிலர் தங்களை நக்சல் தீவிரவாத இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிலையில் நக்சல் தடுப்பு பிரிவின் தொடர் முயற்சியால், நக்சல் அமைப்பில் இருந்த 5 பெண்கள் உட்பட 20 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர். 

இது குறித்து சுக்மா எஸ்.பி. கிரண் சவான் கூறுகையில், 

சரணடைந்த 20 பேரும், நக்சல் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டதாகவும், பின்னர் அவர்களின் தீவிரவாத, சட்டவிரோத செயல்களை பார்த்து வெறுப்படைந்ததாகவும் கூறினர். 

போலீசில் சரணடைந்தவர்களில் மிலிட்டியாவின் நக்சல் துணைத் தளபதி உய்கா லக்மா, தண்டகாரண்ய ஆதிவாசி கிசான் மஸ்தூர் சங்கதன் உள்ளிட்டோர் சரணடைந்தனர். அரசின் விதிமுறைகளின்படி, சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து