எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : மதுரை பரவையில் டாக்டர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது அ.தி.மு.க. அழிந்து போகும் எனும் சொல்லும் அண்ணாமலைக்கு மக்கள் சாபம் விட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மதுரை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பரவை மந்தை பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு எம்.எல்.ஏ. அ.தி.மு.க.அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். அருகில் தேர்தல் பொறுப்பாளர் கே.ஏ.கே. முகில், எம்.எஸ்.பாண்டியன், சேர்மன் கலா மீனா ராஜா, முன்னாள் சேர்மன் பரவை ராஜா, பா.குமார்,ஏ.பார்த்திபன், மார்க்கெட் மார்நாடு மற்றும் பரவை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்த பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் உண்மைக்கும், பொய்க்கும் நடைபெறக்கூடிய தேர்தல். அ.தி.மு.க. சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது. தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. திராவிட பூமியில் மக்கள் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.
பொய்களை கூறியே மத்தியில் பா.ஜ.க.வும், மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சிக்கு வந்துள்ளது. 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத பிரதமர் மோடி இப்பொழுது நான் தமிழராக பிறக்கவில்லையே என கூறுகிறார். தமிழ்நாட்டில் அண்ணாமலை எனும் ஆட்டுக்குட்டி உள்ளது. ஆளுங்கட்சி எனும் திமிரில், மெத்தனத்தில் அண்ணாமலை பேசி வருகிறார்.
அண்ணாமலை முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான், அண்ணாமலை அ.தி.மு.க. அழிந்து விடும் என சொல்கிறார். அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி, 2011-ம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக எனும் கட்சியை இருக்காது என மு.க.அழகிரி கூறினார். இன்று மு.க.அழகிரி அரசியலில் இல்லை. அண்ணாமலை கவுன்சிலர் பதவியில் கூட நின்று வெற்றி பெற்றதில்லை. அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் நின்று சரியாக மாட்டிக் கொண்டுள்ளார். அ.தி.மு.க.வையும் அதன் தலைவர்களை பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது.
பா.ஜ.க. தொடங்குவதற்கு முன்பாகவே 1972-ல் அதிமுக தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக தொடங்கும் போது பாஜக எனும் கட்சியே இல்லை. அதிமுக அழிந்து போகும் எனும் சொல்லும் அண்ணாமலைக்கு மக்கள் சாபம் விட வேண்டும். மக்களுக்காக உழைத்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களே அண்ணாமலை தவறாக பேசுகிறார். 10 ஆண்டுகள் ஆட்சியில் பா.ஜ.க. தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்துள்ளது.
மக்கள் நினைத்தால் தான் மந்திரி இல்லை என்றால் தெருவுக்கு தான் செல்ல வேண்டும் என ஜெயலலிதா எங்களுக்கு அறிவுறுத்துவார்.மக்களுக்காக அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை.அதிமுக அழிந்து விடும் எனக்கூறும் அண்ணாமலை தேர்தலுக்குப் பின்னர் அழிந்து விடுவார். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வார ராசிபலன்
14 Feb 2026


