முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு தொகுதியில் 2-வது நாளாக ராகுல் காந்தி நடத்திய ரோடு ஷோ

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 04 03

வயநாடு, வயநாடு தொகுதியில் இரண்டாவது நாளாக  நேற்று  ராகுல் காந்தி  ரோடு ஷோ நடத்தினார்.

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல்  முதற்கட்டமாக வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்த நிலையில், ராகுல் காந்தி, தான் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவர் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரோட் ஷோ நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த நிலையில், இரண்டாவது நாளாக  வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி நேற்று ரோடு ஷோ நடத்தினார்.  அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:- 

இந்திய அரசியல் அமைப்பை அழிக்க ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் முயற்சிக்கின்றன.  ஆனால், நாட்டின் அரசியல் அமைப்பை காக்க காங்கிரஸ் போராடுகிறது.  இந்தியாவின் மிகப்பெரும் தொழில் அதிபர்களின் கருவி போல மோடி செயல்படுகிறார். வேலை வாய்ப்பு இன்மை, விலை உயர்வு பிரச்சினை பற்றி மோடி ஒருபோதும் பேசுவது இல்லை என்று கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து