முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      இந்தியா
Chandrasekhara-Rao 2023 04

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

பாாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 5-ம் தேதி தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் பி.எஸ்.ஆர். தலைவர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை  சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. சந்திரசேகர ராவின் இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

சந்திரசேகர ராவ் பேச்சுக்கள் தொடர்பாக முன்னதாகவே பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்கியிருந்த நிலையில், மீண்டும் அவர் சர்ச்சையை கிளப்பியது, ஆணையத்தின் நடவடிக்கைக்கு வித்திட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா மாநிலம் காங்கிரஸ் கமிட்டியின் மூத்த துணை தலைவர் ஜி. நிரஞ்சனிடம் இருந்து கடந்த 6-ம் தேதி அன்று தேர்தல் ஆணையம் விரிவான புகார் ஒன்றை பெற்றது. 

அதில் கே.சந்திரசேகர் ராவ் சிர்சில்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. 

காங்கிரஸ் கட்சியினர் புகார் தொடர்பாக இன்று 18-ம் தேதி காலை 11 மணிக்குள் தனது நிலைப்பாட்டை விளக்குமாறு சந்திரசேகர ராவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் அவரிடமிருந்து பதில் வரவில்லை என்றால், ஆணையத்தின் உரிய நடவடிக்கைக்கு சந்திரசேகர ராவ் ஆளாக நேரிடும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து