எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியான தோல்விகள் குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியுள்ளார். இங்கிலாந்து அணியுடனான போட்டிக்குப் பிறகு பேசிய அவர் இதயம் உடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 284/6 ரன்கள் எடுக்க, இந்திய அணி 288/8 ரன்களே எடுத்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துடன் தோல்வியைச் சந்தித்தது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றுள்ளது. இது குறித்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் பேசியதாவது: ஸ்மிருதியின் விக்கெட்தான் திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும் எங்களுக்கு அதிகமான பேட்டர்கள் இருக்கிறார்கள். எப்படி ஆட்டம் மாறியதென தெரியவில்லை, இங்கிலாந்துக்கு வாழ்த்துகள். அவர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். தொடர்ச்சியாக விக்கெட்டை வீழ்த்தினார்கள். இந்தத் தோல்வி மோசமான உணர்வைத் தருகிறது.
கடினமாக உழைத்து, அனைத்து கட்டங்களையும் பூர்த்தி செய்தோம். ஆனால், கடைசி 5-6 ஓவர்கள் திட்டமிட்டபடி செல்லவில்லை. இது மிகவும் மோசமானது. நிச்சயமாக இதயம் நொறுங்கிய உணர்வுதான். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம்; விட்டுக்கொடுக்கவில்லை. இருப்பினும் கடைசியான கோட்டை தாண்டியாக வேண்டும். ஏனெனில் கடைசி மூன்று போட்டிகளுமே நன்றாக விளையாடியும் தோற்றோம். முக்கியமான அடுத்த போட்டியில் அந்தக் கோட்டினை தாண்டுவோம் என நம்புகிறேன் என்றார்.
_____________________________________________________________________________________________
7 விக்கெட் வீழ்த்திய மகாராஜ்
பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது. இதில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.
_____________________________________________________________________________________________
மிட்செல்லுக்கு குவியும் வாழ்த்து
ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தனது 34-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். மிட்செல் மார்ஷ் சமீப காலங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் (டி20, ஒருநாள்) மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் பெர்த் நகரில் பிறந்தவர். வலதுகை பேட்டரான இவர் ஆஸி. அணிக்கு வெள்ளைப் பந்தில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து தொடர்களில் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி பெற்றது. தற்போது, இந்தியாவுடன் விளையாடி வருகிறது. கடந்த ஆகஸ்டில் இருந்து மிட்செல் மார்ஷ் 13, 22, 54, 88, 18, 100, 85, 9*, 103*, 46* என ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். சராசரி 76.9ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது பிறந்த நாளுக்கு சக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
_____________________________________________________________________________________________
பாகிஸ்தான் வீரர் சாதனை
பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆசிப் அஃப்ரிடி, தனது 39-ஆவது வயதில் அறிமுகமாகி இரண்டாவது வயதான வீரர என்ற சாதனை படைத்துள்ளார். இவருக்கு முன்பாக மற்றுமொரு பாகிஸ்தான் வீரர் மிரன் பக்ஷா இந்தியாவுக்கு எதிராக 47ஆவது வயதில் அறிமுகமாகி முதலிடத்தில் இருக்கிறார். முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் தற்போது ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதில் ஆசிப் அஃப்ரிடி விளையாடுகிறார். ஆசிப் அஃப்ரிடி கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதினால் ஆறு மாதம் விளையாட தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நோமன் அலி, சஜித் கான் இவர்களுடன் ஆசிப் அஃப்ரிடியும் சேர்ந்தால் பலமான சுழல்பந்துவீச்சாக இருக்குமென கணிக்கப்படுகிறது.
_____________________________________________________________________________________________
ரோகித்தை மிரட்டிய மிட்செல்
உலகின் மிக வேகமான பந்தை ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசியுள்ளார். ரோகித் சர்மாவுக்கு எதிராக இந்தப் பந்தை வீசியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பெர்த் கிரிக்கெட் திடலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேந்தெடுத்தது. முதல் ஓவரில் முதல் பந்தை ஆஸி. வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இந்தியாவின் ரோகித் சர்மாவுக்கு வீசினார்.
இந்தப் பந்தின் வேகம் 176.5கி.மீ/ மணி வேகம் என வேகத்தக் காட்டும் கருவியில் காட்டியது. உண்மையில் ஸ்டார்க் இவ்வளவு வேகமாக வீசினாரா? வேகத்தைக் கணக்கிடும் கருவியில் தொழில்நுட்ப கோளாறு எனக் கூறப்படுகிறது. 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் 161.3 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசி முதலிடத்தில் இருக்கிறார். மழையின் காரணமாக 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்திய அணி மோசமாக பேட்டிங் விளையாடி 136/9 ரன்கள் எடுத்தது. டிஎல்எஸ் விதியின்படி 131 ரன்கள் இலக்காக நிரணயிக்கப்பட்டுள்ளது. மிட்செல் ஸ்டார்க் 6 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து விராட் கோலியின் விக்கெட் எடுத்தார்.
_____________________________________________________________________________________________
ஆஸ்திரேலியா அபார வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்த் கிரிக்கெட் திடலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேந்தெடுத்தது. மழையின் காரணமாக போட்டி 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்திய அணி 136/9 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்தார். டிஎல்எஸ் விதியின்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸி. அணி 21.1 ஓவர்களில் 131/3 ரன்கள் எடுத்து வென்றது. ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் 46 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் அர்ஷ்தீப், வாஷிங்டன், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள். அடுத்த போட்டி அடிலெய்டில் அக்.23-இல் தொடங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.