எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது. கில், சாய் சுதர்ஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினர்.
37 லீக் போட்டி...
ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 37 லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்கள். இருவரும் ஜோடி சேர்ந்து அருமையான தொடக்கத்தை அந்த அணிக்கு அமைத்து கொடுத்தனர். 52 ரன்கள் வரை இவர்கள் ஜோடி அமைத்தனர்.
ஹர்ப்ரீத் ப்ரார்...
இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை பறிகொடித்தார். பின்னர் ரிலீ ரோசோவ் களம் இறங்கினார். 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நூர் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அப்போது களத்திற்கு வந்த ஹர்பிரீத் சிங் பாட்டியா மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் அதிரடியாக விளையாடினார்கள்.
143 ரன் இலக்கு...
அப்போது ஹர்ப்ரீத் ப்ரார் 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிது. கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாஹா இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சாஹா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாய் சுதர்ஷன் களத்துக்கு வந்தார். 35 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். அவரை லிவிங்ஸ்டன் வெளியேற்றினார். தொடர்ந்து மில்லர், சாய் சுதர்ஷன், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
குஜராத் வெற்றி...
சாய் சுதர்ஷன் 31 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் ராகுல் தெவாட்டியா மற்றும் ஷாருக்கான் இணைந்து பொறுப்புடன் ஆடினர். ஹர்ஷல் படேல் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்களை கைபற்றினார். ஷாருக் மற்றும் ரஷித் கானை அவர் அவுட் செய்தார். 19.1 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குஜராத். தெவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணிக்காக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்கள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்கள், அர்ஷ்தீப் மற்றும் சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சாய் கிஷோர் வென்றார்.
சுப்மன் கில் பேட்டி...
வெற்றி பெற்ற பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே முடிக்க நினைத்தோம். ஆனால் போட்டி மைதானத்தின் தன்மை காரணமாக கடைசி ஓவர் வரை சென்றது. இறுதியில் இந்த இரண்டு புள்ளிகளை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. கேப்டன்சி செய்வது உண்மையிலேயே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட விரும்புகிறேன். பேட்டிங் செய்யும் போது கேப்டன்சி பற்றி அதிகம் யோசிப்பது கிடையாது. லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்து விட்டேன். எங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் சரியான பங்களிப்பினாலே இந்த வெற்றி கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
சாம் கர்ரன் பேட்டி...
தோல்வி அடைந்த பின்னர் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்களுடைய அணி வீரர்கள் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என நினைக்கிறேன். குஜராத் அணியில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர், சிறப்பாக பந்து வீசினார். இந்த ஆடுகளத்தில் நாம் 160 - 170 ரன்கள் அடித்திருந்தால் வெற்றியை பெற முடியும் என்று நம்பினேன். மேலும் நாங்கள் பந்து வீசிய முறையை பார்த்து எங்களுக்கு வெற்றி கிட்டும் என நினைத்தேன். பேட்டிங்கில் நாங்கள் கொத்தாக விக்கெட் இழக்கின்றோம். அதுவே தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. என்ன செய்தால் இதை தடுக்க முடியும் என்று தெரிய வேண்டும். ஐ.பி.எல் போன்ற தொடர்களில் இது போன்று தொடர்ந்து போட்டிகளை தோற்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
என்னுடைய கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கர்நாடக சிறுவன்
18 Nov 2025பெங்களூரு: கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதியுள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு
18 Nov 2025ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
வருகிற 25-ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
18 Nov 2025சென்னை: சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் வருகிற 25-ந் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்
18 Nov 2025மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.
-
சபரிமலை கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் : பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் குவிப்பு
18 Nov 2025சபரிமலை : வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
அதிபர் ஜெலன்ஸ்கி சுற்றுப்பயணம்: பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
18 Nov 2025பாரீஸ் : பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் வாங்க உக்ரைன் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை
18 Nov 2025சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
-
தொழில் முனைவோர்களுக்கு ரூ.1.50 கோடி வரை மானியம் வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு
18 Nov 2025சென்னை: வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட தொழில் முனைவோர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.


