முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலில் பருவமழை பேரழிவுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை : பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

Source: provided

சிம்லா : 22 பேரின் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ.9,000 கோடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பேரணியில் ராகுல் காந்தி பேசியதாவது,

மோடி பிரதமராக இருக்கும் காலத்தில் மட்டும் தான் அதானி நிறுவன பங்கு சந்தைகள் உயரும். அரசியலைப்பு சட்டத்தை ஒழிப்போம் என பா.ஜ.க. தலைவர்கள் கூறுகிறார்கள். அரசு துறைகளில் 30 லட்சம் காலியிடங்களை கண்டறிந்துள்ளோம். அந்த வேலைகளை இந்திய இளைஞர்களுக்கு வழங்குவோம். 

பட்டப்படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு, ஓராண்டு தொழிற்பயிற்சி வழங்கப்படும்.  ஏழைக் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் வரும் வரை ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, வேளாண்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். 

10 ஆண்டுகளில் 22 பேரின் ரூ.16 லட்சம் கோடி மதிப்பிலான கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பருவமழை பேரழிவுக்கு ரூ. 9,000 கோடி கொடுக்கவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து