Idhayam Matrimony

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      தமிழகம்
eps

Source: provided

மதுரை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்கிறது என்று விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்  செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

அ.தி.மு.க. வலிமையோடு இருக்கிறது. ப.சிதம்பரத்துக்கும், அ.தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. 

வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல், ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல் அழைத்துசென்ற காட்சியை பார்த்தோம். தேர்தல் ஆணையம் அதனை கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் மாநில அரசுக்கு துணைபுரிகிறார்கள். 

அமைச்சர்கள் அங்கேயே முகாமிட்டு, ஆட்சி அதிகாரம், பணபலத்தை பயன்படுத்தி, பரிசு பொருட்களை கொடுத்து ஈரோடு கிழக்கில் தேர்தல் நடந்தது. இதே போல், சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்கிறது. 

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி சட்டப்பேரவையில் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியை விட 6 ஆயிரம் வாக்குகள் தான் குறைவு. அப்போதே எங்களுக்கு என்ன வாக்குகள் கிடைக்கும் என்பது தெரிந்து விட்டது. மறுபடியும் போட்டியிட நினைத்தால் விடமாட்டார்கள். 

சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாததால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்கிறது. தி.மு.க. 200 இடங்களில் வெல்லும் என்று ஸ்டாலின் பேசுகிறார். அவரின் கனவு பலிக்காது. 

தமிழக மக்களை பொறுத்தவரை மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை பிரித்து பார்த்து தான் வாக்களிக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து