எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை, : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா நிறுத்தப்பட்டுள்ளார். இவரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக 9 அமைச்சர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து உள்ளார்.
இந்த குழுவில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சருமான க.பொன்முடி, கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் உள்ளூர் எம்.எல்.ஏ. ஆர்.லட்சுமணனும் இடம் பெற்றுள்ளார். இவர்கள் விக்கிரவாண்டியில் கடந்த 14-ந்தேதி கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் உள்ளூர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
தேர்தலில் யார் யாருக்கு எந்த ஏரியாவை ஒதுக்குவது என்றும் தேர்தலில் வெற்றி பெற என்னென்ன வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அப்பகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் காணை மத்திய ஒன்றியத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு ஒன்றியத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்தந்த நிர்வாகிகளை அழைத்து பேசி உள்ளனர்.
இதே போல் காணை வடக்கு ஒன்றியத்தில் அமைச்சர் சக்கரபாணி, கோலியனூர் மேற்கு ஒன்றியத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றியத்தில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.இதன் அடிப்படையில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா 20 ஆயிரம் ஓட்டுகளை பிரித்து கொடுத்து அதன் அடிப்படையில் தேர்தல் பணியாற்ற தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் ஒன்றியச் செயலாளர்களுக்கும் எவ்வளவு ஓட்டுகளை பார்க்க சொல்வது என்பது பற்றி ஆலோசித்து வருகின்றனர். விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயாவும் நிறுத்தப்பட்டுள்ளதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டதன் காரணமாக எவ்வாறு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த மாதம் 20-ந்தேதியில் இருந்து சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதால் அதில் கலந்து கொள்ளும் அமைச்சர்கள் கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு உதவ கட்சி நிர்வாகிகளையும், பேச்சாளர்களையும் அழைத்துக் கொள்ளலாம் என்று தலைமை கூறி உள்ளதால் இப்போதே கட்சி நிர்வாகிகள் விக்கிரவாண்டி செல்ல தயாராகி வருகின்றனர். அதுமட்டுமின்றி கூட்டணி கட்சி உள்ளூர் பிரமுகர்களும் பிரசாரத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை கூட்டம் முடிந்ததும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒரு நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.


