எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்பு செயளாலர் வி.வி ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றதில் பொதுமக்கள் பங்கேற்று கண்டனம் முழக்கமிட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தில் 58 க்கு மேற்பட்டோர் பலியாகி, 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் எடப்பபாடியாரின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளசார சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை பேச்சியம்மன் படித்துறை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் வி. வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிகள் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பா.நீதிபதி, எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், மாணிக்கம், கருப்பையா மற்றும் வில்லாபுரம் ராஜா, ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், கணேஷ்பிரபு, எஸ்.டி.ஜெயபாலன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், திருப்பாலை ஜீவா, பெரியசெல்வம், வக்கீல் தி.கோபி, அய்யப்பன், பரவை ராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், ஏ.பார்த்திபன், ஜெ.மாணிக்கம், சக்திவிநாயகர்பாண்டின், சோலைராஜா, எம்.ஜி.ராமச்சந்திரன், சுகந்தி அசோக்,வக்கீல்தமிழ்செல்வன், ஆர்.பாஸ்கரன், தளபதிமாரியப்பன், கலைச்செல்வம், ஜோசப்தனிஸ்லாஸ், ஞானசேகரன், கே.வி.கே.கண்ணன், விளாங்குடி கே.ஆர்.சித்தன், எம்.எஸ்.செந்தில்குமார், பைக்காரா கருப்பசாமி, பைக்காரா முத்துவேல், ரவிராஜ், எம்.எஸ்.கே.மல்லன், அனுப்பானடி பாலகுமார், ராணிநல்லுச்சாமி, பழங்காநத்தம் ராஜாராம், வக்கீல் பாலமுருகன், சி.ஆர்.கதிரவன், முனிச்சாலை சரவணன், அரியூர் ராமகிருஷ்ணன், கார்னர் பாஸ்கர், எம்.ஏ.நாசர்,திடீர்நகர் பாலா,நாகேந்திரன், ஐயப்பன், கோவில் நெடுஞ்செழியின், ஏ.மாயத்தேவன், எஸ்.எம்.டி.ரவி, முத்துமாரிஜெயக்குமார், தங்கபாண்டி, சண்முகசுந்தரம், கராத்தே கார்த்திக், ராஜா சீனிவாசன், கே.கே.நகர் மணி, புதூர் நாகராஜ், பூக்கடை முருகன், பி.ஆர்.சி.திருமுருகன், ஏஜாஸ்உசேன்,
ராஜன் செல்லப்பா பேசியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்ற போது எடப்பாடியார் முதலில் அஞ்சலி செலுத்திபிறகு தான் மற்ற கட்சிகளும் அங்கு சென்றன. அது அது மட்டுமல்ல அங்கு மருந்து இல்லை என்று முதன் முதலில் எடப்பாடியார் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமையான கண்டனத்தை வலியுறுத்தியும் ,இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடியார் போராடி வருகிறார். ஏனென்றால் பல்வேறு மாநிலங்களில் இருந்து மெத்தனால் கடத்தி வரப்படுகிறது சிபிஜ தான் விசாரணை செய்ய முடியும்,
இன்றைக்கு முதலமைச்சர் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என்று கூறுகிறார் ஏனென்றால் அவருக்கு காவல்துறை மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமல்லாது இந்த கள்ளச்சாராயம் அந்த பகுதியில் உள்ள திமுகவைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள், பகுதிசெயலாளர்கள் மீறி நடக்குமா அவர்களையும் கைது செய்ய வேண்டும் .இந்த போராட்டத்துக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இருந்தாலும் எதைப்பற்றி நாங்கள் அஞ்ச மாட்டோம் ஸ்டாலின் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் போயாது என பேசினார்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: சட்டசபையில் நியாயம் கிடைக்கவில்லை ஏனென்றால் அங்கு பேச முடியவில்லை அதனால் தான் இன்றைக்கு வீதியில் மக்கள் சேர்ந்து போராடுகிறோம்.
ஏழை எளிய மக்கள் உயிரை பறிக்கும் வகையில் இந்த அரசு உள்ளது ,கள்ளச்சாராயத்தால் 58 பேர் தற்போது வரை பலியாகி உள்ளனர் நாங்கள் மேடை விட்டு இறங்கும் போது எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்று அச்சம் எங்களுக்கு உள்ளது.
நடைபெற்ற சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டுமென்று எடப்பாடியார் கூறுகிறார் ஆனால் அமைச்சர் ரகுபதி சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறுகிறார். சிபிஐவிசாரணை நடைபெற்றால் தான் நேர்மையாக முடிவு கிடைக்கும். சட்டசபையில் 45 நாள் நடத்த வேண்டும் ஆனால் அவர்கள் 8 நாளாக சுருக்கி விட்டார்கள், நடைபெற்ற சம்பவத்திற்கு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப கூட அனுமதி தராமல் கல் மனம் கொண்ட அரசாக உள்ளது.
மக்கள் உயிர் பிரச்சினை காட்டிலும் வேறு எந்த பிரச்சனையை சட்டசபையில் கேள்வி எழுப்ப முடியும் பதில் சொல்ல தயாராகாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். பதில் சொன்னால் நாங்கள் அவரை ஏற்றுக் கொள்கிறோம்.
ஸ்டாலினை போல நாங்கள் ஏசி அறையில் இருந்து கொண்டு கோரிக்கையை கொடுக்கவில்லை நேரடியாக சென்று மக்களை பார்த்து அவர்கள் விட்ட கண்ணீரை தான் நாங்கள் கூறுகிறோம். முதல் நாள் சட்டமன்றம் நடைபெற்ற போது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அந்த மரபை நாங்கள் மீறவில்லை.
ஆனால் மறுநாள் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது 58 பேர்கள் செத்த பிறகு இடமாற்றத்தை செய்கிறார மாவீரன் ஸ்டாலின், இவர் நடவடிக்கை எடுக்க 58 உயிர்கள் தேவைப்படுகிறது, களத்தில் சென்று இன்னும் மக்களை சந்திக்கவில்லை ஆறுதல் கூறவில்லை ஏனென்றால் அவரது மனம் குற்ற உணர்ச்சியாக உள்ளது.
இப்படிப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை, ஏற்கனவே மரக்காணம் சம்பவத்தில் 23 பேர் பலியானார்கள் அதற்கு சிபிசிஐடி போன்ற விசாரணை நடைபெறுகிறது இன்னமும் அது நிலுவையில் தான் உள்ளது புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் காவல்துறை சுதந்திரமாக இருந்தது, ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்தது, தற்போது காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறிவிட்டது.
நீங்கள் சட்டமன்றத்தில் பேச வாய்ப்பை மறுத்தீர்கள் ஆனால் இன்றைக்கு 8 கோடி மக்களும் ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும் எடப்பாடியார் கோட்டைக்கு வரவேண்டும் என்று உரிமை குரலை எழுப்பி வருகிறார்கள்.எடப்பாடியாருக்கு நீங்கள் எத்தனை தடை போட்டாலும் அந்த தடைகளை தகர்த்து எறிந்து களத்தில் போராட கழகத் தொண்டர்கள் காத்து உள்ளார்கள். எடப்பாடியார் மருந்து இல்லை என்று கூறியதற்கு அமைச்சர் கணக்கு காண்பித்தார் நாங்களமக்கள் உயிரைக் காக்க கணக்கு தான் வேண்டும் என்று கேட்கிறோம்.
விஷ முறிவு மருந்து உள்ளதா என்று கேட்டதற்கு இதுவரையும் பதில் இல்லை தமிழகத்தில் இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது ஏற்கனவே மரக்காணம் சம்பவம், நல்ல மாடுக்கு ஒரு சூடு என்பது போல இனியும் நீங்கள் ஆட்சியை தொடரக்கூடாது ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
23 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
வளர்ப்பு நாயின் நகக் கீறல்: ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் பலி
23 Sep 2025அகமதாபாத் : வளர்ப்பு நாயின் நகக் கீறலில் ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
23 Sep 2025நியூயார்க் : அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.