எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்பு செயளாலர் வி.வி ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றதில் பொதுமக்கள் பங்கேற்று கண்டனம் முழக்கமிட்டனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தில் 58 க்கு மேற்பட்டோர் பலியாகி, 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் எடப்பபாடியாரின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளசார சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை பேச்சியம்மன் படித்துறை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் வி. வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிகள் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பா.நீதிபதி, எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், மாணிக்கம், கருப்பையா மற்றும் வில்லாபுரம் ராஜா, ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், கணேஷ்பிரபு, எஸ்.டி.ஜெயபாலன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், திருப்பாலை ஜீவா, பெரியசெல்வம், வக்கீல் தி.கோபி, அய்யப்பன், பரவை ராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், ஏ.பார்த்திபன், ஜெ.மாணிக்கம், சக்திவிநாயகர்பாண்டின், சோலைராஜா, எம்.ஜி.ராமச்சந்திரன், சுகந்தி அசோக்,வக்கீல்தமிழ்செல்வன், ஆர்.பாஸ்கரன், தளபதிமாரியப்பன், கலைச்செல்வம், ஜோசப்தனிஸ்லாஸ், ஞானசேகரன், கே.வி.கே.கண்ணன், விளாங்குடி கே.ஆர்.சித்தன், எம்.எஸ்.செந்தில்குமார், பைக்காரா கருப்பசாமி, பைக்காரா முத்துவேல், ரவிராஜ், எம்.எஸ்.கே.மல்லன், அனுப்பானடி பாலகுமார், ராணிநல்லுச்சாமி, பழங்காநத்தம் ராஜாராம், வக்கீல் பாலமுருகன், சி.ஆர்.கதிரவன், முனிச்சாலை சரவணன், அரியூர் ராமகிருஷ்ணன், கார்னர் பாஸ்கர், எம்.ஏ.நாசர்,திடீர்நகர் பாலா,நாகேந்திரன், ஐயப்பன், கோவில் நெடுஞ்செழியின், ஏ.மாயத்தேவன், எஸ்.எம்.டி.ரவி, முத்துமாரிஜெயக்குமார், தங்கபாண்டி, சண்முகசுந்தரம், கராத்தே கார்த்திக், ராஜா சீனிவாசன், கே.கே.நகர் மணி, புதூர் நாகராஜ், பூக்கடை முருகன், பி.ஆர்.சி.திருமுருகன், ஏஜாஸ்உசேன்,
ராஜன் செல்லப்பா பேசியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்ற போது எடப்பாடியார் முதலில் அஞ்சலி செலுத்திபிறகு தான் மற்ற கட்சிகளும் அங்கு சென்றன. அது அது மட்டுமல்ல அங்கு மருந்து இல்லை என்று முதன் முதலில் எடப்பாடியார் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமையான கண்டனத்தை வலியுறுத்தியும் ,இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடியார் போராடி வருகிறார். ஏனென்றால் பல்வேறு மாநிலங்களில் இருந்து மெத்தனால் கடத்தி வரப்படுகிறது சிபிஜ தான் விசாரணை செய்ய முடியும்,
இன்றைக்கு முதலமைச்சர் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என்று கூறுகிறார் ஏனென்றால் அவருக்கு காவல்துறை மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமல்லாது இந்த கள்ளச்சாராயம் அந்த பகுதியில் உள்ள திமுகவைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள், பகுதிசெயலாளர்கள் மீறி நடக்குமா அவர்களையும் கைது செய்ய வேண்டும் .இந்த போராட்டத்துக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இருந்தாலும் எதைப்பற்றி நாங்கள் அஞ்ச மாட்டோம் ஸ்டாலின் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் போயாது என பேசினார்.
ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: சட்டசபையில் நியாயம் கிடைக்கவில்லை ஏனென்றால் அங்கு பேச முடியவில்லை அதனால் தான் இன்றைக்கு வீதியில் மக்கள் சேர்ந்து போராடுகிறோம்.
ஏழை எளிய மக்கள் உயிரை பறிக்கும் வகையில் இந்த அரசு உள்ளது ,கள்ளச்சாராயத்தால் 58 பேர் தற்போது வரை பலியாகி உள்ளனர் நாங்கள் மேடை விட்டு இறங்கும் போது எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்று அச்சம் எங்களுக்கு உள்ளது.
நடைபெற்ற சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டுமென்று எடப்பாடியார் கூறுகிறார் ஆனால் அமைச்சர் ரகுபதி சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறுகிறார். சிபிஐவிசாரணை நடைபெற்றால் தான் நேர்மையாக முடிவு கிடைக்கும். சட்டசபையில் 45 நாள் நடத்த வேண்டும் ஆனால் அவர்கள் 8 நாளாக சுருக்கி விட்டார்கள், நடைபெற்ற சம்பவத்திற்கு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப கூட அனுமதி தராமல் கல் மனம் கொண்ட அரசாக உள்ளது.
மக்கள் உயிர் பிரச்சினை காட்டிலும் வேறு எந்த பிரச்சனையை சட்டசபையில் கேள்வி எழுப்ப முடியும் பதில் சொல்ல தயாராகாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். பதில் சொன்னால் நாங்கள் அவரை ஏற்றுக் கொள்கிறோம்.
ஸ்டாலினை போல நாங்கள் ஏசி அறையில் இருந்து கொண்டு கோரிக்கையை கொடுக்கவில்லை நேரடியாக சென்று மக்களை பார்த்து அவர்கள் விட்ட கண்ணீரை தான் நாங்கள் கூறுகிறோம். முதல் நாள் சட்டமன்றம் நடைபெற்ற போது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அந்த மரபை நாங்கள் மீறவில்லை.
ஆனால் மறுநாள் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது 58 பேர்கள் செத்த பிறகு இடமாற்றத்தை செய்கிறார மாவீரன் ஸ்டாலின், இவர் நடவடிக்கை எடுக்க 58 உயிர்கள் தேவைப்படுகிறது, களத்தில் சென்று இன்னும் மக்களை சந்திக்கவில்லை ஆறுதல் கூறவில்லை ஏனென்றால் அவரது மனம் குற்ற உணர்ச்சியாக உள்ளது.
இப்படிப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை, ஏற்கனவே மரக்காணம் சம்பவத்தில் 23 பேர் பலியானார்கள் அதற்கு சிபிசிஐடி போன்ற விசாரணை நடைபெறுகிறது இன்னமும் அது நிலுவையில் தான் உள்ளது புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் காவல்துறை சுதந்திரமாக இருந்தது, ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்தது, தற்போது காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறிவிட்டது.
நீங்கள் சட்டமன்றத்தில் பேச வாய்ப்பை மறுத்தீர்கள் ஆனால் இன்றைக்கு 8 கோடி மக்களும் ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும் எடப்பாடியார் கோட்டைக்கு வரவேண்டும் என்று உரிமை குரலை எழுப்பி வருகிறார்கள்.எடப்பாடியாருக்கு நீங்கள் எத்தனை தடை போட்டாலும் அந்த தடைகளை தகர்த்து எறிந்து களத்தில் போராட கழகத் தொண்டர்கள் காத்து உள்ளார்கள். எடப்பாடியார் மருந்து இல்லை என்று கூறியதற்கு அமைச்சர் கணக்கு காண்பித்தார் நாங்களமக்கள் உயிரைக் காக்க கணக்கு தான் வேண்டும் என்று கேட்கிறோம்.
விஷ முறிவு மருந்து உள்ளதா என்று கேட்டதற்கு இதுவரையும் பதில் இல்லை தமிழகத்தில் இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது ஏற்கனவே மரக்காணம் சம்பவம், நல்ல மாடுக்கு ஒரு சூடு என்பது போல இனியும் நீங்கள் ஆட்சியை தொடரக்கூடாது ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி
01 Feb 2026புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி.
-
தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்
01 Feb 2026புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
-
உதய்பூரில் இன்று நடக்கும் திருமண நிகழ்வில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவை கரம் பிடிக்கிறார்
01 Feb 2026ஐதராபாத், விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
-
மத்திய பட்ஜெட் 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில் உள்ளது: பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்
01 Feb 2026புதுடெல்லி, தொலைநோக்குடன், நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2047-ல் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
01 Feb 2026புதுடெல்லி, சி.பி.ஐ. புலன்விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
-
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி தகுதிக்கான ‘டெட்’ தேர்வில் 1.50 லட்சம் பேர் தேர்ச்சி
01 Feb 2026சென்னை, பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
தைப்பூசத் திருநாள்: இ.பி.எஸ். வாழ்த்து
01 Feb 2026சென்னை, தைப்பூசத் திருநாள் வினைகள் விலகி வெற்றிகள் மலரும் நாள் என எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!
01 Feb 2026புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்திற்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி
01 Feb 2026புதுடெல்லி, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழில் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Feb 2026சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார்.
-
சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை: மத்திய பட்ஜெட் குறித்து மம்தா கருத்து
01 Feb 2026டெல்லி, 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களுக்கு விரோதமான பட்ஜெட் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வார ராசிபலன்
01 Feb 2026 -
லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு
01 Feb 2026டெல்லி, மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி ரத்து நீட்டிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Feb 2026சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


