எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் நூற்றாண்டு காலம் பழமையான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதி ஆட்டத்தில் மெத்வதேவ் - அல்காரஸ் ஆகியோர் மோதுகின்றனர். இந்த நிலையில், இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கண்டு ரசித்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
அமைச்சர் உதயநிதி வாழ்த்து
செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சர்வாணிகாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ன் நேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே' செஸ் கேண்டிடேட் மாஸ்டர் ' பட்டத்தை வென்ற அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தங்கை சர்வாணிகாவை நேரில் வாழ்த்தினோம். உலகளாவிய போட்டிகளில் தடம் பதித்து தமிழ்நாட்டிற்கும் - இந்தியாவிற்கும் தங்கை சர்வாணிகா தொடர்ந்து பெருமை சேர்த்து வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.தங்கை சர்வாணிகாவின் வெற்றிப் பயணம் தொடர என் அன்பும், வாழ்த்தும்.என தெரிவித்துள்ளார்.
எதிர்கொள்ளும் வீராங்கனைகள்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் குரூப் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொள்ளும் வீராங்கனைகளின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மொத்தம் 39 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் ஒவ்வொரு குழுவிலும் மூன்று வீராங்கனைகள் என மொத்தம் 13 குழுக்களாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டுள்ளனர்.
பி.வி.சிந்து, எஸ்டோனியா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் குபா மற்றும் மாலத்தீவின் பாத்திமத் நபாஹாவை எதிர்கொள்கிறார். தரவரிசையில் கிறிஸ்டின் குபா 75வது இடத்திலும் , பாத்திமாத் 111வது இடத்திலும் உள்ளனர். பி.வி.சிந்து கடந்த 2016ம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கமும், கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.இம்முறையும் பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பு
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிஜிட்டல் தள ஸ்ட்ரீமிங் பார்ட்னராக ஜியோசினிமா உள்ளது.
இந்த நிலையில, இந்தியாவில் ஜியோ சினிமா செயலியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது . ஆங்கிலம், இந்தி , தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 4k தொழில்நுட்பத்தில் அனைத்து போட்டிகளையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமா கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்தது . இந்த சீசனில் 62 கோடி பார்வைகளைப் பெற்று ஜியோ சினிமா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோலி, ரோகித்துக்கு பாராட்டு
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியதாக வி.வி.எஸ். லட்சுமணன் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கிருந்து போராடி வென்றது இந்திய அணியின் கேரக்டரை காட்டுவதாக அவர் பாராட்டியுள்ளார். அத்துடன் கோப்பையை வென்று ராகுல் டிராவிட் கையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கொடுத்தது நெஞ்சை தொடும் செயலாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
மொத்த நாடும் அந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்தது. குறிப்பாக கடந்த உலகக்கோப்பையில் நாம் அபாரமாக விளையாடியும் பைனலில் தோல்வியை சந்தித்தோம். ராகுல் டிராவிட்டுடன் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். ஆனால் கடைசிப் பந்து வீசியதும் அவர் தன்னுடைய உச்சகட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். அவரிடம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் கோப்பையை கையில் கொடுத்தது நெஞ்சைத் தொட்ட சிறப்பான செயலாக அமைந்தது. அதை அவர் கொண்டாடிய விதம் இந்த வெற்றி ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டியது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை 13 மாவட்டங்களில் இன்று கனமழை
16 May 2025சென்னை : தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் முக்கிய பயங்கரவாதி பலி
16 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட 6 பயங்கரவாதிகளில் ஒருவன், 2 பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவன் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 24-ல் டெல்லி பயணம்
16 May 2025சென்னை : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வரும் 24-ம் ததேி முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அழைப்பை ஏற்று டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
துருக்கி, அஜர்பைஜானை முழுமையாக புறக்கணிக்க இந்திய வர்த்தகர்கள் முடிவு
16 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து இந்திய வர்த்தகர்கள் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
-
பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசின் புதிய திட்டம் தயார்...?
16 May 2025புதுடில்லி : அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கொண்ட குழுவை, வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2025
16 May 2025 -
வியோமிகா சிங்கின் சாதி குறித்த பேச்சு: சமாஜ்வாதி எம்.பி.யால் மீண்டும் சர்ச்சை
16 May 2025லக்னோ : கர்னல் சோபியா குரேஷி ஒரு முஸ்லிம் என்பதால் பா.ஜ.க.
-
காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
16 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில், அமைதிக்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வுடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் சீமான்
16 May 2025சென்னை : கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை சீமான் வெளியிட இருக்கிறார்.
-
விண்ணில் பாயும் 101வது ராக்கெட்: திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு
16 May 2025திருப்பதி : வரும் 18ம் தேதி விண்ணில் ஏவ உள்ள 101வது ராக்கெட் வெற்றி பெற வேண்டி, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.
-
தமிழகத்தில் 2026-ம் ஆண்டில் மட்டுமல்ல 2031, 2036ம் ஆண்டிலும் தி.மு.க., ஆட்சி தான்: ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
16 May 2025ஊட்டி, ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட்டில் கருத்து கேட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநில முதல்வர்களுடன் கருத்து கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
-
15 மாநிலங்களில் 'ஜெய் ஹிந்த் சபா' கூட்டம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
16 May 2025புதுடெல்லி : நாட்டின் 15 மாநிலங்களில் ‘ஜெய் ஹிந்த் சபா’ எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களை நடத்த இருக்கிறது.
-
பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு
16 May 2025புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, ராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய
-
தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: அமைச்சர் உறுதி
16 May 2025சென்னை : தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றமில்லை' என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-பாக்., போரை நிறுத்தியது நான் தான் : அதிபர் ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
16 May 2025தோஹா : “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான் தான்” என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் ஆறாவது முறையாக தெரிவித்துள்ளார்.
-
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழில் 8, அறிவியலில் 10,838 பேர் சதம்
16 May 2025சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பாட வாரியாக 100-க்கு 100 முழு மதிப்பெண்கள் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் தமிழில் 8 பேரும், அதிகபட்சமாக அறிவியலில்10,838 பேரும்
-
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
16 May 2025சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
-
பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி
16 May 2025சென்னை : பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் 92.09 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
ஐ.பி.எல். போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்
16 May 2025புதுடில்லி : ஐ.பி.எல். போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில் ஐ.பி.எல்.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: புதுச்சேரி, காரைக்கால் தனியார் பள்ளிகளில் 96.90 சதவீதம் தேர்ச்சி
16 May 2025புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் 96.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
16 May 2025மதுரை : பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் நின்று வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தேரூர் பேரூராட்சி தலைவி அமுதராணியின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்ற மத
-
ரோகித் சர்மா ஸ்டாண்ட் திறப்பு
16 May 2025இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் மும்பை வான்கடே மைதானத்தில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது.
-
ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவல்
16 May 2025புதுடெல்லி : ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.
-
10-ம் வகுப்பு தேர்வில் 70 வயது முதியவர் தேர்ச்சி
16 May 2025சிதம்பரம் : சிதம்பரம் அருகே 70 வயது முதியவர் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
-
அஜந்தா உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசிக்க பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் இயக்கம்
16 May 2025சென்னை : அஜந்தா, எல்லோரா, கஜுராஹோ ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை பார்த்து ரசிப்பதற்காக, இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயிலை இயக்குகிறது.இந்த சுற்றுலா