எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 3 (வெண்கலம்) பதக்கங்களை வென்றுள்ளது. இந்தநிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப்பதக்கம் வென்று டெல்லி விமான நிலையம் வந்த மனு பாக்கருக்கு ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து மனு பாக்கர் கூறுகையில், இங்கே இவ்வளவு அன்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். 10 மீ தனி நபர் ஏர் பிஸ்டல், 10 மீ, ஏர் மிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றிருந்தார்.
_________________________________________________________________________________________
இந்திய ஒலிம்பிக் சங்கம் விளக்கம்
மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக் வில்லேஜ் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ள போகத்த்தை சந்தித்து பேசினேன். இந்திய ஒலிம்பிக் சங்கமும் இந்திய அரசாங்கமும் அவளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தேன். நாங்கள் வினேஷ் போகத்திற்கு அனைத்து மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவை வழங்குகிறோம். வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்திற்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் முறையீடு செய்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
_________________________________________________________________________________________
வினேஷ் போகத்துக்கு புகழாரம்
பி.வி.சிந்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: டியர் வினேஷ் போகத், எங்கள் கண்களுக்கு நீங்கள் எப்போதும் சாம்பியன்தான். நீங்கள் தங்கம் வெல்ல வேண்டுமென நான் மிகவும் நம்பியிருந்தேன். பிடிசிஎஸ்இ பயிற்சி மையத்தில் உங்களுடன் சிறிது நேரம் செலவிட்டிருக்கிறேன். ஒரு பெண் சூப்பர்ஹியூமன் ( மனித ஆற்றலுக்கு மேற்பட்ட) சக்தி உடன் சண்டையிடுவதைப் பார்க்க முடிந்தது. அது மிகவும் உற்சாகத்தை கொடுத்தது. நான் உங்களுக்காக எப்போதும் இருப்பேன். இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த நல்லவற்றையும் உங்களது வழிக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். இந்த ஒலிம்பிக்கில் பெரிதும் எதிர்பார்த்த பி.வி.சிந்தும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________________________________________
நியூசிலாந்து வீரரின் பதிவு வைரல்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நியூ ஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் எக்ஸ் பதிவு தற்போது வைரலாகியிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது நியூ ஸிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில், ஜிம்மி நீஷம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மேற்கொண்டிருந்தததுதான் அந்தப் பதிவு. அதில் அப்படி என்ன சொல்லியிருந்தாரோ, அது இப்போது படிக்கும்போது, இந்திய ரசிகர்களுக்கு சொல்லப்படுவதுபோலவே உள்ளது.
அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், குழந்தைகளே, விளையாட்டில் ஈடுபட வேண்டாம், கேக் செய்வது அல்லது வேறு எந்த வேலையையும் எடுத்துக்கொள்ளுங்கள். நன்கு உடல் கொழுத்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து 60 வயதில் இறந்துவிடலாம் என்று பதிவிட்டிருந்தார். 2019ஆம் ஆண்டு அவர் பதிவிட்டிருந்ததை, சமூக வலைதளங்களில் மக்கள் தற்போது தேடிப்பிடித்து வைரலாக்கி வருகிறார்கள்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில், மகளிருக்கான மல்யுத்தத்தில், 100 கிராம் உடல் எடை கூடுதலாக இருந்ததற்காக, இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, இந்தியர்களின் இதயங்களில் பேரடி தாக்கிய நிலையில்தான் இது வைரலாகியிருக்கிறது.
_________________________________________________________________________________________
இந்திய பெண்கள் அணி தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்தியா ஜெர்மனியை எதிர்கொண்டது. முதல் மேட்சில் ஸ்ரீஜா அகுலா- அர்ச்சனா கிரிஷ் கமத் ஜோடி ஜெர்மனியின் ஜியாவோனா ஷான்- யுயன் வான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 1-3 எனத் தோல்வியடைந்தது. 2-வது மேட்சில் மணிகா பத்ரா- ஜெர்மனியின் அன்னெத் கவ்மான் மோதினார்கள். இதில் மணிகா பத்ரா 1-3 எனத் தோல்வியடைந்தார். 3-வது மேட்சில் அர்ச்சனா கிரிஷ் கமத்- ஜியாவோனா ஜோடி விளையாடியது. இதில் அர்ச்சனா 3-1 என வெற்றி பெற்றார். 4-வது போட்டியில் ஸ்ரீஜா அகுலா- அன்னெட் கவ்மான் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஸ்ரீஜா 0-3 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தியா 1-3 எனத் தோல்வியடைந்து வெளியேறியது. தடகளத்தில் பெண்களுக்கான 100 மீட்ர் தடை ஓட்டம் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி ஏமாற்றம் அடைந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.