முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

78-வது சுதந்திர தினம்: தேசியக் கோடி ஏற்றிய கவர்னர் ஆர்.என் .ரவி

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Rajbhavan

சென்னை, 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தேசியக் கோடியை கவர்னர் ஆர்.என் .ரவி  ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று (வியாழக்கிழமை)கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று கவர்னர் ஆர்.என். ரவி தேசியக் கோடி ஏற்றினார். தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தேசிய சுதந்திர போராட்ட வீரர்களைப் போல உடையணிந்த பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து