எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பெய்ரூட் : தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல கட்டிடங்கள், மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களையும் குண்டு வீசி அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
ஹமாசுக்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரும் துணையாக இருந்து வருகின்றனர். லெபனானில் இருந்து அவ்வப்போது இஸ்ரேல் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தெற்கு லெபனான் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை ஆயுதங்கள் பதுக்கி வைக்கும் இடமாகவும், வீடுகளில் சுரங்க பாதைகள் அமைத்தும், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றது.
இதனால் பாதுகாப்பு கருதி ஹிஸ்புல்லா அமைப்பினர் செல்போனுக்கு பதிலாக பேஜர் கருவிகளை தகவல் தொடர்பு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். தங்களது இருப்பிடம் பற்றி வெளியில் தெரியாது என்பதற்காக அவர்கள் இதை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உலகமே அதிரும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே சமயத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியது. இதன் தொடர்ச்சியாக வாக்கி டாக்கி கருவிகள் வெடித்து சிதறியது. இந்த இரு சம்பவங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 37 பேர் உயிர் இழந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த புது விதமான தாக்குதல் லெபனான் நாட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டி தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை இஸ்ரேல் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. மறுக்கவும் இல்லை. தொலை தொடர்பு கருவிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் வாயிலாக அனைத்து வரம்புகளையும் இஸ்ரேல் மீறி விட்டதாகவும், இந்த தாக்குதலால் கடும் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிகளை குறி வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 8 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இஸ்ரேலிய பீரங்கி நிலைகளை ராக்கெட் மூலம் தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினரும் அதிரடி தாக்குதலில் இறங்கினார்கள். தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தினார்கள்.
போர் விமானங்கள் மூலம் சரமாரியாக குண்டுகளை வீசினார்கள். இந்த குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் பல கட்டிடங்கள், மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ராக்கெட் லாஞ்சர்களையும் குண்டு வீசி அழித்து விட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதில் உயிர் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் தொடர்ந்து குண்டு மழை பொழிந்ததால் லெபனானில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். சைரன் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. எல்லைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவா கேலண்டர் தெரிவித்துள்ளார். போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காசா போர் தொடங்கிய பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளனர். இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே முழுமையாக போர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால