எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சண்டிகர் : அரியானாவில் 90 சட்டசபை தொகுதிகளில் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4 முனை போட்டி நிலவும் அரியானாவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.
பா.ஜ.க. தனித்து...
அரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அங்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. அதே போல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், 2 கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எனவே இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது.
1031 வேட்பாளர்கள்...
அரியானாவில் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இங்கு தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இங்கு 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 101 பேர் பெண்கள்.
தீவிர பிரச்சாரம்...
இங்கு கடந்த சில நாட்களாக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் யமுனா நகர் மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனுராக் தாக்கூர், ஹேமா மாலினி ஆகியோர் குருஷேத்ராவில் தீவிர பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிவானி மற்றும் ஜிந்த் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சர்க்கி தத்ரி பகுதியில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் கலந்து கொண்டார். பிரதமர் மோடி இங்கு 4 பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றார்.
பிரசாரம் ஓய்ந்தது...
கடைசிநாள் பிரச்சாரமான நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது.
கருத்து கணிப்புகள்...
தேர்தல் பிரச்சார காலம் முடிவடைந்ததால், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் ஏஜென்ட்டுகள் தவிர வாக்காளர்கள் அல்லாத அனைத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொகுதிகளை விட்டு வெளியேறும்படி அரியானா தலைமை தேர்தல் ஆணையர் பங்கஜ் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் முடிந்தபின் அரை மணி நேரத்துக்கு பின்பே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.
வாக்கு எண்ணிக்கை...
அரியானா மாநிலத்தில் இன்று தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அரியானாவில் இப்போது நிலவும் அரசியல் களம் இதுதான். அங்கு அரசியல் களம் பரபரப்பானதாக மாறியுள்ள நிலையில், யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது அக். 8 தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதுதான் தெரிய வரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி
30 Jan 2026சென்னை, “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க.
-
பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
30 Jan 2026சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –30-01-2026
30 Jan 2026 -
உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரம் நிறுத்த புதின் சம்மதம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
30 Jan 2026நியூயார்க், உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு வாரத்துக்கு நிறுத்த ரஷ்ய அதிபர் புதியன் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
போராட்டங்கள் இயல்பாக நடக்க வேண்டும்: தற்காலிக ஊழியர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கருத்து
30 Jan 2026சென்னை, தற்காலிக ஊழியர்களை போராட தூண்டி விடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்ரவரி 5-ல் கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை
30 Jan 2026சென்னை, பிப்ரவரி 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி 5-ம் தேதி (வியாழக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின
-
பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோ வாருங்கள்: ஜெலன்ஸ்கிக்கு ரஷ்யா அழைப்பு
30 Jan 2026மாஸ்கோ, அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோவிற்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு
30 Jan 2026சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
-
ஜோ பைடன் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா அரசு
30 Jan 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இதர இந்தியத் தலைவர்கள், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் க
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
-
தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு: காங்கிரசுடன் உறவு சுமுகமாகவே உள்ளது: கனிமொழி எம்.பி. பேட்டி
30 Jan 2026நெல்லை, தி.மு.க. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க. எம்.பி.
-
அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
30 Jan 2026நியூயார்க், அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.
-
சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
30 Jan 2026சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ.
-
14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான்-வங்கதேசம் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்
30 Jan 2026டாக்கா, வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே கடந்த 14 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
-
சத்தீஸ்கரில் 4 நக்சலைட்டுகள் சரண்
30 Jan 2026ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 2பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் நேற்று தங்களது ஆயுதங்களுடன் போலீசில் சரணடைந்தனர்.
-
மகாத்மா காந்தியின் 79-வது நினைவு நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
30 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டு பெண்கள் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
30 Jan 2026சென்னை, திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
30 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க பல்லக்கில் நாட் கதிரறுப்பு விழா.
- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருசாபிசேகம்.
-
இன்றைய நாள் எப்படி?
30 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
30 Jan 2026


