எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம்: ஃபெஞ்சல் புயலால் ஏற்காட்டில் 144.4 மில்லி மீட்டர், 238 மில்லி மீட்டர் என அடுத்தடுத்த இரு நாட்களில் மிக கன மழை பெய்தது. இதனால், ஏற்காடு மலை கிராமங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சேலம் ஏற்காடு சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவால் ஏற்காடுக்குச் செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல, ஏற்காட்டில் சனிக்கிழமை 144.4 மில்லி மீட்டர் மழையும் , ஞாயிற்றுக்கிழமை 238 மில்லி மீட்டர் என கனமழை கொட்டியது. காற்றுடன் பெய்த தொடர் மழையால் ஏற்காட்டில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரங்களை அப்புறப்படுத்தும் பணி ஈடுபட்டுள்ளனர். ஏற்காடு 60 அடி பாலம் அருகே ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் பல இடங்களில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்காட்டின் பல மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சேலம் ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல ஆட்சியர் பிருந்தா தேவி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஏற்காட்டில் ஏற்பட்ட மண் சரிவு பகுதியில் நேற்று முன்தினம் ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மண்சரிவை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படும் இடங்களை ஆய்வு செய்து மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, ஏற்காட்டில் பல கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக மரங்கள் சாய்ந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால், கிராம மக்கள் வீடுகளில் மின்சார வசதியின்றி இருள் சூழ்ந்த நிலையில் வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்காட்டில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரித்து வரும் நிலையில் வெளியிடங்களுக்கு மக்கள் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மழையால் ஏற்காட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-01-2025.
13 Jan 2025 -
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சேவை புரிந்தோருக்கு தமிழக கவர்னர் விருதுகள் அறிவிப்பு
13 Jan 2025சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் சேவை புரிந்தோருக்கான விருதுகளை கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
-
பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது
13 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே
-
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Jan 2025சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள
-
சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்
13 Jan 2025சென்னை : கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
13 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும
-
இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
13 Jan 2025புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
-
பாக்.கில் சுரங்க விபத்து: 11 பேர் பலி
13 Jan 2025பலூசிஸ்தான் : பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
-
தொடர் கனமழை - நிலச்சரிவு: பிரேசிலில் 10 பேர் பலி
13 Jan 2025பிரேசிலியா : பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
13 Jan 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
சனாதன தர்மத்தை மீட்டவர்: வள்ளலாருககு கவர்னர் புகழாரம்
13 Jan 2025கிருஷ்ணகிரி: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 கேரள மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு
13 Jan 2025திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மகா கும்பமேளாவால் உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய்
13 Jan 2025லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று தொடங்கியிருக்கும் மகா கும்பமேளாவால் உ.பி.க்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் உற்பத்தி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
13 Jan 2025சென்னை: நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார் .
-
மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு
13 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 115.03 அடியில் இருந்து 114.74 அடியாக சரிந்துள்ளது.
-
கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்திற்கு இ.பி.எஸ். வாழ்த்து
13 Jan 2025சென்னை: கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
-
இன்று பொங்கல் பண்டிகை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
13 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியம்: மகா கும்பமேளா குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
13 Jan 2025புதுடெல்லி: மகா கும்பமேளா, இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது என பிரதமர் தெரிவித்துள்ளார்.;
-
காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்டுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
13 Jan 2025ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
-
போக்சோ வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கைது
13 Jan 2025மதுரை: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளா கோலாகல தொடக்கம்: லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்
13 Jan 2025பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்.
-
தமிழக காவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
13 Jan 2025சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்
-
ராஜஸ்தானில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு விடுமுறை
13 Jan 2025ஜெய்ப்பூர் : கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.