எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : அமலாக்கத்துறையில் ஏதோ பிரச்னை உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சத்தீஸ்கர் மதுபான ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை பரிசீலித்து வரும் உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, ஜாமீன் மனுவுக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்திருக்கும் பதில் மனு "அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது" என்றும், புலனாய்வு அமைப்பின் ஆலோசனையை கேட்காமலேயே அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ தெரிவித்துள்ளார்.
நான் சார்ந்திருக்கும் துறையைப் பொறுத்த வரையில் ஏதோ கோளாறு இருக்கிறது. யாரையும் கலந்தாலோசிக்காமல், அவ்வளவு ஏன், கூடுதல் சொலிசிடர் ஜெனரலாகிய நாங்கள் ஆஜராவதற்கு முன்பே, நீதிமன்ற கவுண்டரில் அரைகுறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று எஸ்.வி. ராஜூ குற்றம்சாட்டியிருக்கிறார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மீனாட்சி அரோரா பேசுகையில், இதுபோன்ற நடவடிக்கைகள், குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறையிலேயே வைத்திருப்பதற்கான ஒரு உக்தியைப் போல தெரிவதாகக் கூறினார்.
இதையடுத்து தனது வாதத்தைத் தொடங்கிய எஸ்.வி. ராஜூ, நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் ஏதோ மறைந்திருக்கிறது என்பதை நானும் உணர்ந்தேன். விசாரணை அமைப்புடன் கலந்தாலோசனை செய்யாமலும், விசாரணை அமைப்புகளிடம் உண்மைத் தன்மையை கேட்டறியாமலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நீதிபதி அபய் எஸ். ஓகா, ஒரு வழக்கில், பிரமாணப் பத்திரம் அல்லது பதில் மனுவை வழக்குரைஞர் மூலமாகத்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்.
எனவே, நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையே பதில் மனுவை தாக்கல் செய்துவிட்டதால், வழக்குரைஞரை குறைகூற முடியாது என்றும் அரசு தரப்பு வழக்குரைஞர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் இருக்கும் குளறுபடிகள் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று அமலாக்கத் துறை இயக்குநரிடம் கோரப்பட்டிருப்பதாகவும், பதில் மனுவில் பிரச்னைகள் இருக்கும் நிலையில் அதனை தாக்கல் செய்த அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் எஸ்.வி. ராஜூ கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை வரை அதனை வைத்திருங்கள், நான் பிரமாணப் பத்திரத்தை சோதிக்க வேண்டும், இதில் ஏதோ மறைந்திருப்பதாக நான் உணர்ந்ததால்தான் என் தரப்பில் விசாரணை நடத்தினேன். இந்த துறையில் இதுபோன்ற தவறுகள் நேரக்கூடாது, எங்கள் வழியாக தாக்கல் செய்யப்படாததால், எங்களை குறை கூற முடியாது என்று கூறும் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
வாதத்தை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்ற அமர்வு, அறிவுறுத்தல்கள் இல்லாமல் எவ்வாறு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியது. மேலும், அறிவுறுத்தல்கள் இல்லாமல் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தை நாங்கள் எப்படி ஏற்க முடியும்? என்று அமலாக்கத் துறைதான் சொல்ல வேண்டும் என நீதிபதி ஓகா கூறியிருக்கிறார். மேலும், இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது என்றும் நீதிபதி ஓகா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
நெல்லையில் வருகிற 21-ம் தேதி கடலம்மா மாநாடு: சீமான் தகவல்
13 Nov 2025நெல்லை, நெல்லையில் வருகிற 21-ந்தேதி கடலம்மா மாநாடு நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-11-2025
13 Nov 2025 -
மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
13 Nov 2025சென்னை, மேகதாது அணை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஒரு பவுன் தங்கம் விலை ரூ.95 ஆயிரத்தை கடந்தது ஒரே நாளில் ரூ.2,400 உயர்வு
13 Nov 2025சென்னை, தங்கம் விலை நேற்று 2-வது முறை உயர்ந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டால
-
புதுக்கோட்டையில் அருகே திடீரென சாலையில் இறங்கிய விமானத்தால் திடீர் பரபரப்பு
13 Nov 2025புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் விமானம் ஒன்று சாலையில் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
13 Nov 2025புதுடெல்லி, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையிட வேண்டும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Nov 2025சென்னை : தமிழகத்தின் மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா..? தமிழக அரசு விளக்கம்
13 Nov 2025சென்னை, ஆண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;
-
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க்: அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
13 Nov 2025சென்னை, ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்த உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது டாக்டர் உமர்தான் டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி
13 Nov 2025டெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது டாக்டர் உமர்தான் என்பது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
-
பீகாரில் 243 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை
13 Nov 2025பாட்னா, பீகார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 243 தொகுதிகளில் பதிவான வாக்குக்கள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.
-
பாக்.கில் விரைவில் அரசியல் மாற்றம்? அதிகாரத்தை கைப்பற்றினார் ராணுவ தளபதி அசிம் முனிர்
13 Nov 2025இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உச்சபட்ச அதிகாரத்தை ராணுவ தளபதி அசிம் முனிர் கைப்பற்றியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முக்கிய மசோதாவில் கையெழுத்திடார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..! 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது
13 Nov 2025வாஷிங்டன்: மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
-
தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்பு
13 Nov 2025சென்னை, அடுத்தடுத்து 3 உருவாகும் 3 புயல் சின்னங்களால் தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஹால்டிக்கெட்எடுப்பதில் சிரமம்: தேர்வு எழுதுபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு
13 Nov 2025சென்னை: ஹால்டிக்கெட் எடுப்பதில் தேர்வர்கள் சிரமத்தை பொக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
-
குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட மருந்து தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
13 Nov 2025காந்தி நகர்: மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழகத்தில் மொத்தம் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
13 Nov 2025சென்னை, தமிழகத்தில் 2.11 லட்சம் வாக்குச்சாவடி நிலைமுகவர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
-
டெல்லி பயங்கரவாத தாக்குதல்: 3 டாக்டர்கள் உள்பட 9 பேர் கைது
13 Nov 2025ஸ்ரீநகர், டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 3 டாக்டர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
-
உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடம்
13 Nov 2025பெலெம்: உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற உதவுங்கள்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
13 Nov 2025சென்னை: போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது, மகளிர் உரிமை தொகை பெற தி.மு.க.
-
லிபியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் பலி
13 Nov 2025திரிப்பொலி: லிபியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.
-
டெல்லி பயங்கரவாத தாக்குதல்: டிச.6-ம் தேதி தாக்குதல் நடத்தும் சதிச்செயல் திட்டம் முறியடிப்பு
13 Nov 2025புதுடெல்லி, டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
வந்தே மாதரம் பாட மறுத்த அரசு ஆசிரியர் சஸ்பெண்ட்
13 Nov 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி
13 Nov 2025லிமா: தென் அமெரிக்கா பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.


