எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாஸ்கோ, உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு ரஷ்யா, உக்ரைனில் தனித்தனியாக அரசு முறை பயணம் மேற்கொண்ட அவர், இரு நாடுகளின் அதிபர்களிடமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்த 11-ம் தேதி அமெரிக்கா, உக்ரைன் அதிகாரிகள் ரியாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 நாட்கள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மாஸ்கோவில் கூறியதாவது: 30 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் போர் நிறுத்தத்தை அமல் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதுதொடர்பாக அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். இவ்வாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விக்கோப், மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை ரகசியமாக சந்தித்துப் பேசினார். அப்போது 30 நாட்கள் போர் நிறுத்தம் தொடர்பாக இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, சிறப்பு தூதர் ஸ்டீவ் விக்கோப் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


