எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் கடுமையான கவலை குறித்து தெரிவிக்கவே நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். தங்கத்தை பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது.
குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும். அதனால் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டுத் தங்கத்தை அடகு வைத்து வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகளால் எளிதாகக் கடன் பெறும் வழியை நேரடியாகக் குறைத்து, கடன் வாங்குபவர்கள் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதை குறைத்துவிடும்.
நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புற கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும் மற்றும் முறையான நிதி சேர்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுக்கும்.
மேலும், கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக, சிறிய அளவிலான விவசாயக் கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம். இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும்.
எனவே, மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (தங்க பிணையத்திற்கு எதிராகக் கடன் வழங்குதல்) வழிகாட்டுதல்கள் 2025-ல் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்திட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த வேண்டும். நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
கடன் கோருபவர்களின் நிதி அணுகலைப் பாதுகாக்கும் அதே வேளையில் கடன் பெறும் அளவினை மதிப்பிட ஒரு சமநிலையான ஒழுங்குமுறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். எனவே, விவசாய சமூகத்துக்கும் கிராமப்புற பொருளாதாரத்துக்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இதே கருத்தை வலியுறுத்தி இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கும் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-05-2025
29 May 2025 -
மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆலோசனை
29 May 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
-
கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
29 May 2025சென்னை, கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபல நடிகர் ராஜேஷ் காலமானார்
29 May 2025சென்னை, சென்னையில் பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் நேற்று காலமானார்.
-
5 ஆண்டுகளில் புதிய உச்சத்தை தொட இருக்கும் வெப்பநிலை
29 May 2025வாஷிங்டன், 5 ஆண்டுகளில் வெப்பநிலை புதிய உச்சத்தை தொடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
29 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே 29)22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையானது.
-
நார்வே: கேப்டன் தூங்கியதால் வீட்டிற்குள் புகுந்த சரக்கு கப்பல்
29 May 2025ஓஸ்லோ, நார்வேயில் உள்ள கடலோர பண்ணை வீட்டிற்குள் கப்பல் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அறிக்கையை திருப்பி அனுப்பவில்லை: கீழடி அகழாய்வு குறித்து மத்திய அரசு விளக்கம்
29 May 2025புதுடெல்லி, கீழடி அகழாய்வு அறிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
-
கனமழை காரணமாக ஊட்டியில் சுற்றுலா தலங்கள் 2 நாள் மூடல்
29 May 2025நீலகிரி, ஊட்டியில் 2 நாட்கள் கனமழை காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 கைது
29 May 2025ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பில் இருந்த இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
29 May 2025சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
அதிகார வரம்பை மீறுகிறீர்கள்: அதிபர் ட்ரம்பின் இறக்குமதி வரிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
29 May 2025நியூயார்க், டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட
-
வாசிப்பதை வழக்கமாகக் கொண்டவர்: நடிகர் ராஜேஷுக்கு கமல்ஹாசன் புகழாரம்
29 May 2025சென்னை, வாசிப்பதையும், சிந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் நடிகர் ராஜேஷ் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
-
மாமல்லபுரத்தில் இன்று அதிக மதிப்பெண் எடுத்த 600 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
29 May 2025மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் இன்று அதிக மதிப்பெண் எடுத்த 600 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி த.வெ.க. தலைவர் விஜய் கவுரவிக்கிறார்.
-
எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிறுமி: துணை முதல்வர் நேரில் பாராட்டு
29 May 2025சென்னை, எவரெஸ்ட் சிகரம் ஏறிய நெல்லை சிறுமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
-
குற்றால அருவிகளில் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிப்பு
29 May 2025தென்காசி, குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு மேலும் நெருக்கடி
29 May 2025டாக்கா, வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
ராஜேஷ் அருமையான மனிதர்: நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி
29 May 2025சென்னை, எனது நண்பர் ராஜேஷ் அருமையான மனிதர் என்று நடிகர் ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
130 நாட்கள் பணிக்காலம் நிறைவு: அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு
29 May 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகப்போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடி
29 May 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடியை அளித்துள்ளது.
-
உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் 10 அரசு சேவைகளை எளிமையாக்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
29 May 2025சென்னை, உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் முதல் கட்டமாக சுகாதார சான்றிதழ் உள்ளிட்ட10 அரசு சேவைகளை
-
மதுரை, பழங்காநத்தத்தில் ரூ.68.38 கோடி மதிப்பில் மேம்பாலம்: நாமக்கல்லில் ரூ.424.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட நான்கு வழிச்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
29 May 2025செங்கல்பட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில்
-
சரக்கு கப்பல் மூழ்கிய விவகாரம்; பேரிடராக அறிவித்தது கேரள அரசு
29 May 2025கொச்சி, சரக்கு கப்பல் மூழ்கிய விவகாரத்தை பேரிடராக கேரள அரசுஅறிவித்துள்ளது.
-
பாக்.கிற்கு உளவு பார்த்ததாக சந்தேகம்: ராஜஸ்தானில் அரசு ஊழியர் கைது
29 May 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் அரசு ஊழியர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தாரா என்ற சந்தேகத்தில் போலீசார் அவரை கைது செய்தனர்.
-
நகராட்சி நிருவாகம்-குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
29 May 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 16