எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: 2023-24 நிதியாண்டில் பணம் நோட்டுகள் அச்சடிப்பதற்கு 5101.4 கோடி ரூபாய் செலவான நிலையில், 2024-25 நிதியாண்டில் 25 சதவீதம் அதிகரித்து 6372.8 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள பண மதிப்பு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. நோட்டுகளின் அளவு 5.6 சதவீதம் 2024-25 நிதியாண்டில் அதிகரித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் 40.9 சதவீதம் புழக்கத்தில் இருந்ததாகவும், 10 ரூபாய் நோட்டுகள் 16.4 சதவீதம் புழக்கத்தில் இருந்தாகவும் வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. 10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் 31.7 சதவீதம் புழக்கத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ கடந்த 2023ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தது. அப்போது சுமார் 3.56 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அதில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையில் 98.2 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளது.
நாணயங்கள் மதிப்பு மற்றும் அளவில் முறையே 9.6 சதவீதம், 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது. எலக்ட்ரானிக் பணம் (e-rupee) மதிப்பு 334 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய், 50 7பாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில் 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ. அச்சிடுவதில்லை. 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


