எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்பிரீத் பும்ரா இந்திய டெஸ்ட் அணியில் ஜனவரி 5, 2018ஆம் ஆண்டு அறிமுகமானார். இவரது வித்தியாசமான பந்துவீச்சு பாணி பலரையும் அச்சுறுத்தியது. வலது கை வேகப் பந்துவீச்சாளரான பும்ரா டெஸ்ட்டில் 46 போட்டிகளில் விளையாடி 210 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக பும்ரா விளையாடிய முதல் போட்டியில் இந்திய அணி தோற்க, பும்ரா இல்லாமல் விளையாடிய இந்திய அணி 2-ஆவது டெஸ்ட்டில் வென்றது. பும்ரா அறிமுகமானதில் இருந்து இந்திய அணிக்கு 46 போட்டிகளில் விளையாடியுள்ளதில் 20 போட்டிகள் மட்டுமே வென்றுள்ளது. பும்ரா இல்லாமல் இந்திய அணி 27 போட்டிகளில் 19 -இல் வென்று அசத்தியுள்ளது. பும்ராவுடன் இந்திய அணி - 46-இல் 20 வெற்றி, 22 தோல்வி, 5 சமன். பும்ரா இல்லாமல் இந்திய அணி - 27-இல் 19 வெற்றி, 5 தோல்வி, 3 சமன். பும்ரா விளையாடினால் வெற்றி சதவிகிதம் 43 -ஆகவும், பும்ரா இல்லாவிட்டால் வெற்றி சதவிகிதம் 70-ஆகவும் இருக்கிறது. இங்கிலாந்துடன் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், அடுத்த போட்டியில் பும்ரா விளையாடவிருக்கிறார்.
________________________________________________________________________________________________
இந்திய ஜோடி உலக சாதனை
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 4) போட்டியில் கூட்டு கலப்பு அணி பிரிவில் இந்திய ஜோடியான ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணியாக அதிக புள்ளிகளை பெற்ற ஜோடி என்ற உலக சாதனையையும் படைத்துள்ளனர்.
ரிஷப், 72 அம்புகளில் 68 அம்புகள் 10 புள்ளிகளை 'குறி' பார்த்து எய்தி அசத்தினார். மொத்தத்தில் இவர் மட்டும் 716 புள்ளிகள் பெற்றார். இவரது அணியை சேர்ந்த ஜோதியும் 68 அம்புகள் 10 புள்ளிகளை 'குறி' வைத்து, மொத்தத்தில் 715 புள்ளிகளை பெற்றார். இது இவர்களின் தனிப்பட்ட சிறந்த செயல்பாடாகவும் பதிவானது.
_____________________________________________________________________________________
அரையிறுதியில் அல்காரஸ்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் அல்காரஸ், இங்கிலாந்தின் கேமரூன் நோரி உடன் காலிறுதி சுற்றில் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி சுற்றில் ரஷியாவின் கரன் கச்சனாவை வீழ்த்தி அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
_____________________________________________________________________________________
கில், ஸ்மித் முன்னேற்றம்
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட்டை பின்னுக்கு தள்ளி சக அணி வீரர் ஹாரி ப்ரூக் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் 16 இடங்கள் முன்னேறி டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் தொடர்கிறார். சுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரிஷப் பண்ட் 1 இடம் பின் தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.
_____________________________________________________________________________________
முன்னாள் வீரர் காலமானார்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் (வயது 87) உடல்நலக் குறைவு காரணமாக காலமானர். 1959-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான கோர்டன் ரோர்க், மிகவும் வேகமான பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஷ் தொடரின் 2 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் ஆகும்.
அதன்பின்னர், ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிவிட்டார். அடிலெய்டில் நடந்த அறிமுகப் போட்டியில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், அவரது பந்து வீச்சு முறை மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இந்திய சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக, அவரது கிரிக்கெட் வாழ்க்கை 25 வயதிலேயே முடிவுக்கு வந்தது. முதல் தர கிரிக்கெட்டில், நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக அவர் 88 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மிகக் குறுகிய கால சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில் 4 போட்டிகளில் விளையாடியிருந்த அவர், 1.73 சராசரியுடன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________
அயர்லாந்து அணி அறிவிப்பு
ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்த தொடர்களுக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளுக்கு கேபி லூயிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து ஒருநாள் அணி விவரம்: கேபி லூயிஸ் (கேப்டன்), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, அலானா டால்செல், லாரா டெலானி, சாரா போர்ப்ஸ், ஆமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, லூயிஸ் லிட்டில், ஜேன் மாகுயர், லாரா மெக்பிரைட், காரா முர்ரே, லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட். அயர்லாந்து டி20 அணி விவரம்: கேபி லூயிஸ் (கேப்டன்), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, லாரா டெலானி, ஆமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, லூயிஸ் லிட்டில், சோபி மெக்மஹோன், ஜேன் மாகுயர், லாரா மெக்பிரைட், காரா முர்ரே, லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், ரெபேக்கா ஸ்டோக்கல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.