எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டுப் பன்றிகள் சுட்டுப் பிடிக்கப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பகுதியில் மேம்பாட்டு பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, அப்பர் கோதையார் பகுதிகளை உள்ளடக்கிய களக்காடு வனச்சரகப் பகுதியில் விவசாயிகளுக்கு காட்டு பன்றிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை தடுப்பதற்கு, காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக வனத்துறை அலுவலகத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காட்டுப் பன்றிகளை சுட்டு பிடிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டு யானை வருவதை தடுப்பதற்கு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வனப்பகுதியை 21.76 சதவீதமாக உயர்த்தியிருக்கிறோம். இன்னும் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் வனப்பகுதி 33 சதவீதமாக உயர்த்தப்படும்.
தமிழ்நாட்டில் வனக் கல்லூரி கோவையில் உள்ளது. தென்பகுதியில் வனக் கல்லூரி அமைப்பதற்கு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். தென் தமிழக மக்களுக்காக திருச்சியில் பல்லுயிர் வன உயிரின பூங்கா 420 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.
இந்நிகழ்வில், களக்காடு சரணாலயம் துணை இயக்குநர் ராமேஸ்வரன், களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஸ், துணை தலைவர் பி.சி.ராஜன், களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகரன், திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் யோககேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


