எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சுரின் : தாய்லாந்து - கம்போடியா மோதலால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
தாய்லாந்து - கம்போடியா இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எல்லை பகுதியில் வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இடத்தை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர். தாய்லாந்து எல்லையில் இருந்து 1,38,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண எல்லையில் உள்ள தா மியூன் தோம் எனும் இந்து கோயலை மையமாக வைத்து இந்த எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த கோயில், தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கம்போடியா கூறி வரும் நிலையில், தாய்லாந்து அது தங்கள் நாட்டுக்கு உரியது என உரிமை கோரி வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்து ராணுவ மோதல்கள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றன.
இந்த மோதல் காரணமாக, தாய்லாந்தின் எல்லையோர மக்கள் 1,38,000 பேர் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்களில், பலர் அரசு ஏற்படுத்தி உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரு நாட்டு ராணுவத்துக்கு இடையேயான மோதல் காரணமாக தாய்லாந்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 14 பேர் பொதுமக்கள் என்றும், ஒருவர் ராணுவ வீரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 பேர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ மோதலுக்கு கம்போடியாதான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாசாய், மோதல் முடிவுக்கு வராவிட்டால் அது போராக வெடிக்கும் என எச்சரித்துள்ளார். “நாங்கள் அண்டை நாடுகள் என்பதால் சமரசம் செய்ய முயற்சித்தோம். அதேநேரத்தில், அவசர காலங்களில் உடனடியாக செயல்பட எங்கள் நாட்டு ராணுவத்துக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். நிலைமை மோசமடைந்தால், அது போராக உருவாகலாம், இருப்பினும் இப்போதைக்கு, அது மோதல் என்ற அளவில் மட்டுமே உள்ளது” என்று பாங்காக்கில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். தாய்லாந்து ராணுவத்தின் தாக்குதல் காரணாக கம்போடியா எல்லையில் வசிக்கும் மக்களும் வெளியேறி வருகின்றனர். எல்லையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கம்போடிய நகரமான சாம்ராங்கில் இருந்து பலரும் பொருட்களுடன் வாகனங்களில் வேகமாக வெளியேறி வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் BM-21 ராக்கெட் அமைப்புகள் மூலம் குண்டுகளை வீசியதாக கம்போடியப் படைகள் தெரிவித்தன. “தகுந்த பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தாய்லாந்து ராணுவம் கூறியுள்ளது. இதனிடையே, இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐநா அமைப்பும் கோரி வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
வைகோ, கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
25 Jul 2025சென்னை, பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் தி.மு.க.
-
வீடு வீடாக சென்று பொதுமக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
25 Jul 2025சென்னை, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Jul 2025ராமநாதபுரம், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-07-2025.
25 Jul 2025 -
புதிய பிரசாரத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
25 Jul 2025புதுக்கோட்டை, 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் புதிய பிரசார முன்னெடுப்பை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
-
5-வது நாளாக சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம்
25 Jul 2025சென்னை : ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு 5-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல வெளியாகி
-
வைகோ தேர்தல் பிரச்சார அட்டவணை வெளியீடு
25 Jul 2025சென்னை : தமிழகத்தில் 8 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதற்கான பிரச்சார அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
-
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
25 Jul 2025சென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
-
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்
25 Jul 2025கடலூர், போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
-
மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு
25 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர்.
-
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது
25 Jul 2025சூலூர்பேட்டை : திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்
25 Jul 2025சென்னை, பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
-
பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
25 Jul 2025புதுடில்லி, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், பார்லிமென்டை சமூகமாக நடத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
-
பார்சிலோனா லெஜெண்ட் ஜவியை நிராகரித்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு
25 Jul 2025மும்பை : இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியளிக்க விரும்பும் பார்சிலோனா லெஜெண்ட் ஜவிக்கு அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்: ஜோ ரூட் வரலாற்று சாதனை
25 Jul 2025மான்செஸ்டர் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
-
வாக்காளர்கள் சிறப்பு திருத்த விவகாரம்: நெருப்புடன் விளையாட வேண்டாம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை : பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கத்திற்கு கடும் கண்டனம்
25 Jul 2025சென்னை : வாக்காளர்கள் சிறப்பு திருத்தம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நெருப்புடன் விளையாடதீர்கள் என்றும் எச்சரிக்க
-
மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
25 Jul 2025மாலே, 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி அதிபர் மொய்சுவை சந்தித்து பேசினார்.
-
கோடீஸ்வரர் பட்டியலில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை
25 Jul 2025நியூயார்க் : கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முன்னணி கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்தார்.
-
ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை: இந்தியா சாதனை
25 Jul 2025புதுடில்லி, ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
-
பார்லி., 5-வது நாளாக முடங்கியது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம்
25 Jul 2025புதுடெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால் நேற்று 5-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் முடங்கின.
-
இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
25 Jul 2025புதுடெல்லி : இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடியை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தாய்லாந்து - கம்போடியா மோதல்: முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சம்
25 Jul 2025சுரின் : தாய்லாந்து - கம்போடியா மோதலால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
-
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு ரூ.295 கோடி
25 Jul 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி
25 Jul 2025தூத்துக்குடி : ரூ.400 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்றுபிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.
-
சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்
25 Jul 2025ஆப்பியா : தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.