Idhayam Matrimony

போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

கடலூர், போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

கடலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- போக்குவரத்து துறையில் கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போதைய முதல்வர் தான் ஒவ்வொன்றாக தீர்வு கொடுத்து வருகிறார்.  புதிய பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 4,800 புதிய பஸ்கள் வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  

மேலும் போக்குவரத்து துறையில் 680 புதிய பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர டிரைவர், கண்டக்டர்கள் என 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பணியமர்த்தப்படுவார்கள். இதன் மூலம் போக்குவரத்து துறை சீரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் பாக்கி இருந்த தொகையும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து